வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

திங்கள், 28 மார்ச், 2011

ஆன்மீக பயணத்தில் எல்லாருக்கும் எல்லாமே கிடைக்குமா?

வாழ்கையில் எப்படி எல்லாமே எல்லாருக்கும் கிடைக்காதோ அதேபோல் ஆன்மீக பயணத்திலும் எல்லாருக்கும் எல்லாமே கிடைக்காது.

இருந்ததாலும் சிலது எல்லோர்க்கும் கிடைக்கும் அது செய்யும் யோகா அல்லது சாதனையை பொருத்தது.

சிலருக்கு ஒரு ஆள பார்த்தவுடனே அவனின் என்ன ஓட்டங்களை அறிய முடியும்,

சிலருக்கு நினைத்த உடன் மழை பொழிய வைக்க முடியும்

சிலருக்கு நினைத்தவுடன் ஒரு இடம் விட்டு மற்றொரு இடம் போக முடியும்

சிலருக்கு கூடு விட்டு கூடு பாய முடியும் அதாவது தனது உடலிலிருந்து மற்றொரு உடலுக்கு செல்ல முடியும்

சிலருக்கு பிரபஞ்சத்த சுற்றி வர முடியும்

இது அவர் அவர் செய்யும் சாதனையை பொறுத்தே அமையும்.

பத்து பேர் சாதனை அ வை செய்யும் பொழுது அதில் பலருக்கு ஒரே விதமான அனுபவம் மற்றும் சக்திகள் கிடைக்க வாய்புகள் அதிகம்.

பத்து பேர் சாதனை அல்லது யோகா ஆ வை செய்யும் பொழுது அ சாதனை செய்தவர்கள் பெறாத அனுபவங்களை இவர்கள் பெறலாம். அதே நேரத்தில் இவர்கள் பத்தில் பேரில் பெரும்பாலானோருக்கு ஒரே வித அனுபவம் கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.

இதை இப்படி சொல்லலாம்

திருச்சியிலிருந்தும் சென்னைக்கு வரலாம் திருப்பதியிலிருந்தும் சென்னைக்கு வரலாம்,

அதே போல் அந்த இடங்களில் இருந்து நடந்தும் வரலாம், பறந்தும் வரலாம், மகிழுந்திலும் வரலாம் (காரு),

பேருந்திலும் வரலாம்.

அனைவரும் வந்து சேரும் இடம் ஒன்று தான் ஆனால் அவர்கள் வந்த வழி, முறை, வேகம் வேறு இதைப்பொருத்து அவர்களின் பயண அனுபவமும் வேறுபடும்.

இதைப்போல ஆன்மிக பயணத்திலும் அவர்கள் பின் பற்றும் யோகா முறையை பொறுத்து, ஆன்ம பக்குவத்தை பொறுத்து, வினைப்பயனை பொறுத்து அனுபவம் மற்றும் பயண வேகம் வேறுபடும். போய் சேரும் இடம் ஒன்றா என்றால்.........இல்லை வேறாகவும் இருக்கலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...