வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

செவ்வாய், 19 ஏப்ரல், 2011

மனித வாழ்க்கையில் கடவுளின் பங்கு என்ன?-பாகம் - 3

குழந்தை பிறப்பது மனிதன் நினைத்தால் தான் நடக்கும், உயிரையும் மனிதனால் உருவாக்க முடியும் என்று சென்றைய பதிவுகளில் பார்த்தோம். (முந்தைய பதிவிற்கான வழிகாட்டி).இந்த பதிவில்

பிறக்கும் குழந்தை ஆணா பெண்ணா? என்பதை நிர்ணயிப்பது யார் என்பது பற்றி பார்ப்போம்.

குழந்தை ஆணா பெண்ணா என்பதை ஆண்டவான் தான் தீர்மானிக்கிறான் என்பது பெரும்பாலானோரின் கருத்து. இறைவனை நம்புபவ்ரின் கருத்து.

எக்ஸ், ஒய் குரோமோசோம்கள் என்பது அறிவியலாளர்களின் கருத்து. மற்றும் பகுத்தறிவாளர்கள் , நாத்திகர்கள் என்று சொல்பவரின் கருத்து.

மேலோட்டமாக பார்த்தால் இருவர் சொல்வதுமே சரிதான். ஆனால் சற்று ஆழ்ந்து சென்றால் இங்கே இருவர் சொல்வதுமே தவறுதான் என்று தெரியவரும்.

ஒரு குழந்தை ஆணாக பிறக்க வேண்டுமா இல்லை பெண்ணாக பிறக்க வேண்டுமா என்பதை தீர்மானிக்கும் சக்தி மனிதனிடம் உள்ளது. (உண்மையில் மனிதனே தீர்மானிகின்றான்). ஆனால் அவன் அதை அறிவதில்லை, உண்மையில் அவன் அறிந்திருந்தாலும் நாட்டில் பிரச்னை வர வாய்ப்புகள் அதிகம்.
அவன் "அந்த" நேரத்தில் "எங்கே" "எந்த நிலையில்" இயங்குகிறான் என்பதை பொறுத்தே ஒருவனுக்கு ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்பது முடிவாகிறது. ( இதை நான் சொல்லவில்லை ஒரு சித்தர் சொன்னது. அனுபவ பூர்வமாக சிலரும் சொல்வது).
ஆக இங்கே இந்த வாதத்தில் பங்கு பெற்ற இருவருமே தோற்க்கின்றனர்
தொடர்ந்தது யார் தோற்கிறார்கள் என்பதை பார்ப்போம்.......


1 கருத்து:

  1. Surprised to see such a cowardliness act as no one is dare to comment on such article.....Do all people really believe in God? If so please explain the reasons to convince....

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...