வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

புட்டபர்த்தி சாய் பாபாவுக்கு மறு பிறவி உண்டா?

ஆன்மீகத்திற்கு செல்வதன் நோக்கமே மறுபிறவியை இல்லாமல் செய்வதற்குத்தான். பலராலும் தெய்வமாக பாவிக்கப்பட்ட சாய்பாபாவுக்கு மறுபிறவி உண்டா இல்லையா?

ஒருவனது உயிரானது அவனுடைய அனுமதியுடன் பூத உடலை விட்டு வெளியே வருமாயின், அவனுக்கு மறுபிறவி இல்லை என்பது ஒரு சிலரின் கருத்து. இந்த கருத்தின் படி பார்த்தால் இவருக்கு மறுபிறவி உண்டு என்றே தோன்றுகிறது. ஏன் எனில் இங்கே இவர் இறந்துள்ளார்.

ஒருவன் எப்பொழுது இருக்கிறான் என்பதை பொருத்தும் அவனுக்கு மறுபிறவி உண்டா இல்லையா என்று சொல்லலாம்.

உத்திராயனத்தில் இறப்பவர்கள் என்னை வந்து அடைவர் என கிருஷ்ணர் கீதையில் சொல்கிறார். சித்திரை மாதம் உத்திராயனத்தை சேர்ந்த்தது. இந்த விதிப்படி பார்த்தல் இவருக்கு மறுபிறவி கிடையாது.

எவன் ஒருவன் சனி திசை முழுவதும் வாழ்கிறானோ அவனுக்கு மறுபிறவி கிடையாது என்பது ஒரு விதி.
இந்த விதிப்படியும் அவருக்கு மறுபிறவி கிடையாது.

ஒருவன் இறக்கும் பொழுது விழிப்புணர்வுடன் இருந்தாலும் அவனுக்கு மறுபிறவி இல்லை என்பது சிலர் கருத்து. இவர் எந்த நிலையில் இறந்தார் என்பது இறைவனுக்கே தெரியும்.


சாய் பாபா பிறந்தது விருசிக லக்னம். பன்னிரெண்டாம் வீட்டுக்கு சுக்கிரன் அதிபதி. அவர் இறந்த லக்னம் ரிஷபம். இதற்க்கு அதிபதியும் சுக்கிரனே. இவர் இறந்ததின் கூட்டு தேதி ஆறு இதுவும் சுக்கிரனுக்கு உரியதே.
இவர் சுக்கிரன் கோளுக்கு சென்று இருப்பாரோ என்று எனக்கு ஒரு எண்ணம்.

இவருக்கு மறுபிறவி இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம் அது அவர் செய்த பாவ புண்ணியத்தை வைத்தும் முடிவாகலாம்.
எல்லாம் இறைவனுக்கே வெளிச்சம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...