வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

மதம் மனிதனுக்கா யானைக்கா? கும்கி


யானைக்கு பிடிக்கும் மதத்தைவிட மனிதனுக்கு பிடிக்கும் மதமே மிகவும் அபாயமானது என்று சொல்வதுதான் கும்கி.

காட்டு யானையை விரட்ட தயார்படுத்தப்படும் சிறப்பு யானைக்கு  பெயர் தான் கும்கி. காடுகளை நாம் அழித்து கொண்டிருந்தாள் காட்டு யானைகள் வீட்டிற்கு வரமால் எங்கு போகும்?

 ஒரு யானை (கொம்பன்) அப்படித்தான் அடிக்கடி ஊர் வயல்வெளிகளில் வந்து மக்களை துவம்சம் செய்து காட்டுக்கு சென்று விடும். அதை விரட்ட கும்கி யானை தேவைப்படுகிறது. கும்கி யானை நேரத்திற்கு கிடைக்காததால் சாதா யானையுடன் நாயகன் சும்மா அந்த ஊருக்கு வருகிறார். அந்த ஊரே இவரை தெய்வமாக பார்க்கிறது. இவருக்கு வேறு மதம் பிடிக்கிறது. கடைசியில் யானை மதம் வென்றதா? நாயகன் மதம் வென்றதா? கொம்பன் அழிக்கப்பட்டானா?  என்பதை திரையில் பார்க்கவும்.

படம் எனக்கு பிடித்திருந்தது. படம் முழுக்க இயற்க்கை காட்சிகள். தம்பி ராமையா பாதி படத்தை தாங்கி நிற்கிறார்.நல்ல நடிப்பு. அவருக்கு கொடுக்கப்பட்ட நகைச்சுவை வசனங்களும் அருமை.
நாயகன் பிரபுவின் மகன். பாத்திரத்திற்கு பொருத்தமாக உள்ளார். தந்தங்களை பிடித்து அந்தரத்தில் நின்று யானையின் நெற்றியில் முத்தமிடும் காட்சி அருமையானது. அதில் உடற்பயற்சி கூட செய்யாலாமா? :)
 நாயகி கருப்பா இருந்தாலும் கலையா இருக்கா என்று சொல்ற மாதிரி. யானையை பார்த்து அவர் மிரளும் காட்சிகள் அருமை. 

பாடல்கள் படத்தோடு பொருத்தமாக உள்ளது.அதனால் தம் அடிக்க யாரும் போகவில்லை.

பிரபு சாலமன் இயக்கம் நன்று.  நாயகனை யானையில்  அமர்த்தி பின்புறத்திலிருந்து வரும் சூரிய ஒளிக்கதிர்களுடன் தன்னுடைய பெயரை போட்டுக்கொண்டுள்ளார். சினிமாத்தனம் என்றாலும் இயற்கையாக அது நன்றாகவே உள்ளது.யானை சண்டை நல்ல முயற்சி. இன்னும் சிறப்பாக எடுத்திருந்திருக்கலாம்.

இயல்பான,அருமையான  படத்தை கொடுத்ததற்காக அவரை நிச்சயம் பாராட்ட வேண்டும். 

மனிதனுக்கு எந்த மதம்  பிடித்திருந்தாலும் அது பெரும்பாலும் அனைவருக்கும்  தீமையையே தருகிறது.

பிற்சேர்க்கை: ஒரு தலைவனின் மனதில் ஏற்படுகின்ற மாற்றமே சமுதாய மாற்றத்திற்கு வித்திடுகிறது.அதற்க்கு ஒரு வலுவான காரணமும் தேவைப்படுகிறது. இந்தப்படத்தில் சமுதாயத்  தலைவனுக்கு அதற்க்கான காரணம் இருக்கின்றது. எனவே அவர் மனதில் மாற்றம் ஏற்ப்படுகிறது என்பதுபோல காட்சியை அமைத்திருக்கலாம். அது காலத்திற்கு ஏற்றார்போல இருந்திருக்கும்.

திங்கள், 10 டிசம்பர், 2012

கமல் என்ன முட்டாளா?

திரைத்துறையில் புத்திசாலியாக கருதப்படும் கமலின் அடுத்த திட்டம் வீட்டுக்குள் திரைப்படம். கமலின் திரைப்படத்தை நேரடியாக தொலைக்காட்சியில் திரையிடும் திட்டம் சில பல   எதிர்ப்புகளையும்,ஆதரவையும் பெற்றுள்ளது.


திட்டம்: திரையரங்குகளில் படத்தை வெளியிடுவதற்கு எட்டு மணி நேரத்திற்கு முன்பு DTH (நேரடி தொலைகாட்சி?)  யில் படத்தை வெளியிடுவது.

நன்மைகள்:
1. ஒரே நேரத்தில் பலரையும் படம் பார்க்க வைக்கலாம்.
2. வெளிநாடுகளிலும் வெளி மாநிலங்களிலும் உள்ளவர்கள் தமிழ் படத்தை உடனடியாக பார்க்கலாம்.
3. பலரும் ஒரே நேரத்தில் படம் பார்ப்பதால் படம் நன்றாக இல்லையென்றாலும் லாபத்தை ஈட்டிவிடும். (எதிர்காலத்தில்) இதுதான் இந்தத்தொழில்நுட்ப்பத்தின் மிகச்சிறந்த  வரப்பிரசாதம்,குர்பானி,அப்பம் :)
4.முதல் காட்சியை பெரும்பாலும் பெண்களால் பார்க்கமுடிவதில்லை. இனி பெண்களும் முதல் காட்சியை பார்க்கலாம்.

தீமைகள்:
1.எதிர்காலத்தில் திரையரங்கத்தொழில் பாதிக்கப்படும். நேரடி தொலைக்காட்சியில் முதலில் படம் பார்க்கலாம் என்றால் நமது தீவிர ரசிகர்கள் இதைத்தான் விரும்புவார்கள்.
2.திருட்டு vcdக்கள் நிறைய உருவாகும். தொலைக்காட்சியில் படம் பார்க்கும் வசதி உள்ளவர்கள் இதை வாங்க மாட்டார்கள்.
3. சிலர்  படத்தை பதிவு செய்து youtube இல் ஏற்ற வாய்ப்புகள் உண்டு. (பதிவு செய்ய முடியாத மாதிரி படத்தை ஒளிபரப்பினால் திருட்டு vcd,youtube பிரச்சனைகளை தவிர்க்கலாம்)

நன்மையா தீமையா?
1. (எதிர்காலத்தில்)இனி நடிகர்களுக்கு பாலபிஷேகம்,பீரபிஷேகம் இருக்காது :)
2.ரசிகர் மன்றம் கலையிழக்கும்.


திரையரங்கு உரிமையாளர்கள் புரிந்து கொள்ளவேண்டியது:
எந்த ஒரு தொழில்நுட்பமும் ஒரு தொழிலை பாதிக்கவே செய்யும். தொழில்நுட்பத்திற்கு தகுந்த மாதிரி தொழிலை மேம்படுத்திக்கொள்வது அல்லது மாற்றிக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். இன்று தெருக்கூத்து என்பது அழிந்துவிட்டது. இதற்க்கு காரணம்  திரைப்படங்களும் திரையரங்குகளும் தான். அதுபோலத்தான் இதுவும். 
மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை மனதில் வையுங்கள்.

திரையரங்குகளும் பாதிக்காமல்,இம்முறையையும் செயல்படுத்த கமல் என்ன செய்யலாம்?
எட்டு மணி நேரத்திற்கு முன்பு தொலைக்கட்சியில் ஒளிபரப்புவதற்கு பதிலாக ஒரே நேரத்தில் திரையரங்கிலும் நேரடித்தொலைக்காட்சியிலும் ஒளிபரப்ப வேண்டும்.
 இதானால் இருதரப்பும் பயனடையும். இந்த நிலையில் நமது ரசிகர்கள் திரையரங்கிலும், பொது மக்கள் (பெண்கள்,குழந்தைகள்,வயதானவர்கள்) நேரடித் தொலைக்காட்சியிலும்  படம் பார்பார்கள். 
நேரடித்தொலைக்கட்சி கட்டணம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் பொதுமக்களும் திரையரங்கிற்கு வருவார்கள்.நேரடித்தொலைகாட்சி வசதியில்லாதவர்களும் திரையரங்கிற்கு வருவார்கள்.

இந்த முறையால் திரைத்துறை மேலும் வளர்ச்சியை சந்திக்கும்.

நேரடித் தொலைக்காட்சியின் மூலம் இனி நேரடித் திரைப்படம்  கண்டுமகிழுங்கள் :)

இது ஒரு சோதனை மறுபதிவு 

வியாழன், 29 நவம்பர், 2012

மாயன்கள் தமிழர்களா? அவர்கள் விண்வெளிக்கு சென்றனரா??


இன்றைய  நிலையில் உலகில் பேரழிவு ஏற்பட்டு பெரும்பாலான மக்களும் கண்டுபிடிப்புகளும் அழிந்துவிட்டால் என்னவாகும்? மிச்சம் மீதி இருப்பவர்கள் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையை, பயன்படுத்திய பொருட்களை பற்றி எழுதியோ,சித்திரம்  வடித்தோ,கதைகளாகவோ கூறி வைப்பார்கள். 

பல நூற்றாண்டுகள் கழித்து அவர்கள் சந்ததியினர் அந்த கதைகளை கேட்கும்பொழுது  பாருடா கூகிள் என்ற ஒன்ற வைத்து இவர்கள் பல தகவல்களை  நொடிகளில் பெற்றனராம், இடம் விட்டு இடம் செல்ல வானத்தில் பறந்து சென்றனராம், ஒரு இடத்தில் நடக்கும் நிகழ்வை மற்றொரு இடத்தில் இருந்து கண்டார்களாம்,செல் என்னும் ஒன்றை பயன்படுத்தி பல மைல் தொலைவில் உள்ளவர்களுடன் பேசினார்களாம்   என்னமா கதை விடுகின்றனர் இவையெல்லாம் வெறும் கட்டுக்கதைகள் என்பார்கள்.

நமது மூதாதையர்கள்  வாழ்ந்த வாழ்க்கையை  நாம் இப்படித்தான் கூறுகின்றோம் என்றே நான் நினைக்கின்றேன்.

ஆன்மீக வாழ்வை விரும்பாமல் அறிவியலிலும் கண்டுபிடிப்புகளிலும், உலக இச்சைகளிலும் மட்டும் கவனம் செலுத்தியவர்களை மாயன்கள்  என்று ஆன்மீக இந்தியர்கள் அழைத்திருப்பார்களோ?


மெய்ப்பொருள் காண்பதறிவு 

வெள்ளி, 23 நவம்பர், 2012

உலக நாடுகளை ஏன்,எப்படி அழிக்க வேண்டும்?


என் அருமை சகோதரர்களே,நண்பர்களே  நாம் உலக நாடுகளை அழிக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்த நாடுகளை அழிக்க நாம்  பரிந்துரைப்பது மனித வெடிகுண்டு  அல்ல, மனிதம்.

ஜாதி,மதம்,இனம்,மொழி, நாடு  என நாம் பல பிரிவுகளால் பிரிந்து நிற்கின்றோம். இவற்றை நாம் அழிக்காவிட்டால் இவற்றால் மனிதகுலம் அழிவதை நம்மால் தடுக்க இயலாது. இவைகள் வெறும் அடையாளங்களாக இருந்தால் பிரச்சனை இல்லை ஆனால் இந்த அடையாளங்களால் நமக்கு வெறி உண்டாகிறது . ஜாதி வெறி,மத வெறி,இன வெறி,தேச வெறி  என்று பல வெறிகளை உண்டாக்க நாம் வழிவகுத்து தந்துள்ளோம்.

ஜாதி பிரச்சனை ஊருக்குள், இந்தியாவிற்குள் பிரச்சனையை உண்டாக்குகின்றது. மதம்,இனம்,நாடு போன்றவை உலக அளவில் பிரச்சனையை உண்டாக்குகின்றது.

வரலாற்றை புரட்டி பார்த்ததால் இனத்திற்காகவும், மதத்திற்காகவும், நாட்டிற்காகவும் தான் பல மனிதர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.என் இனம்,என் மதம், என் நாடு என்ற உணர்வு வெறியாக மாறியதே இதற்க்கு காரணம்.

நாம் அனைவரும் மனிதர்கள் எனும்பொழுது நமக்கு ஏன் இந்த இனம்,மதம்,  நாடு சார்ந்த வெறிகள்?நமக்கு ஏன் இந்த அடயாளங்கள்? 

இனம்,மதம் என்ற அடையாளங்களை  மனிதகுலத்தின் நலனுக்காக நாம் அழிக்கவேண்டும்.நாம் அனைவரும் மனிதர்களாக மட்டும் இருக்க வேண்டும் என்பதை மக்களுக்கு போதிக்க வேண்டும்.

இனம்,மதம் ஆகியவற்றை அழித்த பிறகு  இன்றைய நிலையில் உள்ள நாடு என்பதையும் நாம் அழிக்க வேண்டும்.

அதாவது இந்தியா என்ற  ஒரு நாடு பல மாநிலங்களால் ஆனவை அதுபோல இந்த பூமியும் பல நாடுகளால் ஆனவை. பல மாநிலங்களுக்கும் எவ்வாறு தனித்தனி அதிகாரமும், மத்திய அரசுக்கென்று தனி அதிகாரமும் உள்ளதோ அதைப்போல நாம் உலக அளவில் ஒரு நிர்வாகத்தை உருவாக்கவேண்டும் .

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் தங்களுடைய வருமானத்தை மத்திய அரசாங்கத்தோடு  பகிர்ந்துகொள்கின்றது. அதுபோல இப்புவியில் உள்ள அனைத்து நாடுகளும் தங்களுடைய வருமானத்தை பகிர்ந்துகொள்ளவேண்டும். இப்படி பகிர்ந்துகொள்ளும்போழுது உலகில் ஒவ்வொரு வருடமும் பசியால் இறக்கும் ஆறு மில்லியன் குழந்தைகளின் உயிரை நம்மால் காப்பாற்ற முடியும்.

இந்தியாவில் பல மாநிலங்கள் இருந்தாலும் ஒரு மாநிலம் மற்றொரு மாநிலத்தோடு சண்டையிடுவதில்லை, அந்த மாநிலம் நம்மை தாக்குமோ என்ற அச்சம் கொள்வதில்லை . அதுபோல   உலக நாடுகள் அனைத்தும்  அச்ச உணர்வைவிடும்படி நாம் செய்ய வேண்டும். அவ்வாறு நாம் செய்யும் பொழுது  $2,157,172,000,000 பணத்தை நாம் மனிதகுலத்தின் மேன்மைக்காக பயன்படுத்தலாம்.  நான் கூறிய அந்த தொகை சென்ற  ஆண்டு  உலக நாடுகளால் ராணுவத்திற்காக செலவிடப்பட்டதாகும். 

உலகத்தை ஒரு நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரும்போழுது எல்லை 

பிரச்சனைகளையும்  நம்மால் குறைக்க முடியும். ஒரு நாடு மற்றொரு 

நாட்டினை தாக்குவதை நம்மால்  கட்டுப்படுத்த முடியும்.


இந்தியாவில் உள்ளவர்கள் எப்படி பிற மாநிலங்களுக்கு நினைத்த நேரத்தில் செல்லமுடிகிறதோ அவ்வாறு உலகின் எந்த மூலைக்கும் கடவுச்சீட்டு இல்லாமல் செல்ல முடியும்.

இனம்,மதம் என்ற அடையாளங்களை அழித்து நாடுகளையும் ஒரு நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரும்பொழுது இவை இருப்பவைகளால் கொல்லப்படும் பல பில்லியன் உயிர்களை நம்மால் காப்பாற்ற முடியும்.

உலக நாடுகளை ஒன்றினைக்கும்போழுது சில சிறிய எதிர்ப்புகள் வரத்தான் செய்யும்.  எதிர்ப்புகளை தாண்டி அவ்வாறு ஒரு நிர்வாகத்தை நாம் அமைக்கும்பொழுது மனிதகுலம் பல பிரச்சனைகளை தவிர்க்க முடியும்,பல நன்மைகளை அடைய முடியும்.

இது நடக்குமா என்பது தெரியவில்லை...ஆனால் இது நடக்க வேண்டும். உலக மக்கள் அனைவரையும் நாம் மனிதம் என்ற ஒரு புள்ளியில் இணைக்க வேண்டும். 

செவ்வாய், 20 நவம்பர், 2012

இணையத்தை உபயோகிப்பவர்களே இந்த ஆப்பு போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா?

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல மனிதனுக்கு சொல். IT Act Sec 66(a) வை பயன்படுத்தி இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

முகநூலில் பால் தாக்கரே பற்றி எழுதியதற்காக ஒரு பெண்ணும் அதை  'லைக்' செய்ததற்காக ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டு பிறகு பெயிலில் விடப்பட்டுள்ளனர்.கடந்த ஒரு மாதத்தில் இந்த சட்டத்தை பயன்படுத்தி  இது எத்தனையாவது கைது என்பதை உங்கள் கணக்கிற்கே விட்டு விடுகின்றேன்.

நம்மில் சிலர் வழக்கம்போல  ஒரு பதிவு போட்டுவிட்டு அமைதியாக இருப்போம் சரியா? 

 IT Act Sec 66 a  க்கு  எதிராக சிலர் வழக்கு தொடர்ந்தததாக கேள்வி. அந்த வழக்கிற்கு  என்ன நடந்தது என்று தெரியவில்லை.

நம்முடைய எதிர்ப்பை ஆர்ப்பாட்டம், பேரணி மூலம் காட்டினால்தான் நம்முடைய குமுறல் சட்டத்தை இயற்றுபவர்களின் காதுகளுக்கு செல்லும் என நினைக்கின்றேன்.
விருப்பம் உள்ளவர்கள் சென்னையில் காந்தி சிலைக்கு அருகில் ஒன்று கூடி  IT ACT 66 (a) க்கு  எதிராக குரல் கொடுக்கலாம் என நினைக்கின்றேன்.

விருப்பம் உள்ளவர்கள் எந்த நாளில், எந்த நேரத்தில் இதை செய்யலாம், இதை எப்படி ஒருங்கிணைக்கலாம்  என்ற உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.அனுபவம்  உள்ளவர்கள் வழிகாட்டுங்கள்.

மின்னஞ்சல்:puratchimanidham@gmail.com

நீங்கள் யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை, வரவில்லை என்றால் நான் மட்டும் சென்று  சுண்டல் சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு வந்துவிடுவேன் :)


இந்த பதிவை வெளியிட்டதற்காக நான் கைது செய்யப்படலாம்!


ஞாயிறு, 18 நவம்பர், 2012

சுவனப்பிரியனின் பெண்கல்வி முறையை பின்பற்றி உலத்தையே இசுலாமை ஏற்க செய்வோமா?



 சுவனப்பிரியன் என்பவர்   இசுலாமில் பெண்கல்விக்கு ஆதரவாக ஒரு பதிவு எழுதியுள்ளார். அதில் அவர்  தந்துள்ள முக்கியமான கருத்து.
//மூட்டைப் பூச்சிக்கு பயந்து கொண்டு வீட்டை கொளுத்துவோமா! மாட்டோம். எனவே வயதுக்கு வந்த பெண்கள் தனியே பெண்கள் மட்டுமே படிக்கக் கூடிய பள்ளி கல்லூரிகளில் சேர்ந்து தங்களின் கல்வி அறிவை பெருக்கிக் கொள்வார்களாக!//

அதற்க்கு நாகூர் மீரான் என்பவரின் பின்னூட்டம் 

// பெண்கள் வீதியில் விற்கப்படும் கருவாடு அல்ல..அவர்கள் வைரங்கள், பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்..அவர்கள் பாதுகாப்புக்கு செய்யவேண்டிய அணைத்து வேலைகளும் செய்வது எமது கடமை..அதில் ஒன்று அவர்களுக்கு பாதுகாப்பான கல்வி வழங்குவது..தனியான பெண்கள் கல்லூரி அமைப்பது ..அதில் அணைத்து மத பெண்களுக்கும் இடமளித்து ஆண் பெண் கலப்பு எனும் சமுதாய ஒழுக்க கேடு ஏற்படாமல் தடை ஏற்படுத்துவது ...//

இனி என்னுடைய கருத்து .....
அருமையான  முடிவு 

இனி  வாகாபிச இசுலாமிய பெண்கள் பெண்களுக்காக பெண்களால் இயக்கப்படும் பேருந்தில்,ஆட்டோவில்   மட்டுமே செல்லட்டும் 

இனி  வாகாபிச இசுலாமிய பெண்கள் பெண்களுக்காக பெண்களால் நடத்தப்படும் நிறுவனத்திற்கு  மட்டுமே வேலைக்கு செல்லட்டும் 

பெண்களுக்கென சவூதி அரேபியாவில் ஒரு நகரம் கட்டுவது  போல தமிழகத்தில் வாகாபிச  இசுலாம்  உள்ள  ஊர்களில் பெண்களுக்காக ஒரு தெருவை ஏற்ப்படுத்துவோம் 

ஆம்  உரக்கச்சொல்வோம் 
(கீழே உள்ளவை UNMAIKAL என்பவர் கூறியது )
//• இஸ்லாத்தில் பெண்கள் வேலைக்கு செல்ல தடையில்லை.

• அப்படி வேலைக்கு சென்று சம்பாதித்தாலும் அதை குடும்பத்திற்கு செலவழிக்க வேண்டிய கடமை அவர்களுக்கு கிடையாது.

• இஸ்லாத்தில் பெண்கள் வெளியே செல்ல தடையில்லை.

• இஸ்லாத்தில் பெண்கள் கல்வி கற்க தடையில்லை.

• இஸ்லாத்தில் பெண்கள் விளையாட்டில் பங்குகொள்ள தடையில்லை.

• இஸ்லாத்தில் பெண்கள் கணவனை தேர்ந்தெடுக்க தடையில்லை//

கீழே உள்ளவை என்னுடைய கருத்து 

வாகாபிச இசுலாமிய பெண்கள் பெண்களுடனே மட்டுமே பேச வேண்டும் என்று மறக்காமல் சொல்லுவோம் 

வாகாபிச பெண்களுக்கு இசுலாமியர்கள் தரும் சுதத்திரந்தை பார்த்து பிற மதத்தில் உள்ள பெண்கள் உடனே இசுலாமில் சேரட்டும்.

பெண்கள் இல்லாமல் ஆண்கள் என்ன செய்வார்கள் எனவே உலக ஆண்கள் அனைவரும்  இசுலாமில் சேருவார்கள் .

பின்பு நாம் இறந்து பல கோடி  ஆண்டுகள் கழித்து, அல்லா  நம்மை எழுப்பி அனைவருக்கும் சுவனத்தில் மாளிகைகள் ,பட்டாடைகள் ,மது, பெண்கள் தந்து நம்மை மகிழ்விப்பார்.

உடனே வாகாபிச இசுலாமில் சேர்ந்திடுங்கள் இறந்து பல கோடி  ஆண்டுகள் கழித்து சுவனத்தை அடைந்திடுங்கள்.

பின்குறிப்பு : இந்த பதிவில் இசுலாம் என்பது வாகாபிச  இசுலாமையே குறிக்கும் என கூற காரணம் என்னவெனில்  சம்பந்தப்பட்ட பதிவை எழுதியவரும் அதை ஆதரிப்பவர்களும் வாகாபிய இசுலாமியர்களே.பெண்கல்விக்கு தடை விதித்த அமைப்பு எந்த பிரிவை சார்ந்தது என்று யாராவது  விளக்கினால் நன்றாக இருக்கும். நன்றி 

செவ்வாய், 6 நவம்பர், 2012

நமக்கு சங்கம் வேண்டும் என்று இன்னுமா உங்களுக்கு உரைக்கவில்லை?

சின்மயி- ராஜன், கார்த்திக் சிதம்பரம் - ரவி சங்கரன்  இந்த பிரச்சனைகளை
பார்த்தும் நாம் திருந்தவில்லை என்றால்  நாம் கல்வி கற்று என்ன பயன்? எழுதி  என்னத்தை கிழித்து விடப்போகிறோம்?

நமக்கென்று ஒரு சங்கம் இருந்திருந்தால் சின்மயி-ராஜன் மற்றும் பிறர் 
பிரச்சனையை இந்த அளவிற்கு வளர விடாமல் தவிர்த்திருக்கலாம். சங்கத்தின் மூலமாக  சின்மயி -ராஜன் மற்றும் பிறர்கள் மத்தியில்   நாம் சமாதானத்தை ஏற்ப்படுத்தி  இருக்கலாம்.இங்கே இருவரது நலனையும் நம்மால் காப்பாற்றி இருக்க முடியும்.

சங்கம் இல்லாததால் நாம் அதை செய்யவில்லை  அதனால் ராஜன், சரவணன் ஆகியோர் இன்று  சிறையில். சின்மயியும் மன உளைச்சலில்.

சின்மயி பிரபலம் என்பதால் இதற்க்கு முன்பு  புகார் கொடுத்தவர்களுக்காக எந்த  வித நடவடிக்கையையும் எடுக்காமல் இவருக்காக காவல் துறை 
நடவடிக்கை எடுத்துள்ளதாக பலரும் கூறுகின்றனர். சங்கம் இருந்திருந்தால் முன்பு  புகார் கொடுத்தவர்களின் பிரச்சனைகளையும் நம்மால் தீர்த்து வைத்திருக்க  முடியும்.

'ராபர்ட் வதோராவைவிட கார்த்திக் சிதம்பரம் அதிக சொத்து சேர்த்துள்ளதாக  செய்தி  வந்துள்ளது' என்று கூறியதற்காக ரவி சீனிவாசன் என்பவர் கைது
செய்யப்பட்டுள்ளார். ஆங்கிலேயன்  ஆட்சி காலத்தில்  இருந்ததைவிட இன்று நாம் மிக மோசமான நிலையில் இருக்கின்றோம் என்பதையே இவைகள்
காட்டுகின்றன.

நம்மிடம் சங்கம் இருந்தால்  நாம் இவர்களுக்காக போராடலாம். ஏன் சட்டத்தை கூட  நம்மால் திருத்த முடியும்.

நடிகர்கள் சங்கம், எழுத்தாளர்கள் சங்கம் என்று இருக்கும்பொழுது ஏன் இணைய  எழுத்தாளர்கள்  சங்கம் ஒன்றை ஏற்ப்படுத்த கூடாது?

பிளாக்கர்,டிவிட்டர்,முகநூல் மற்றும் மின்னஞ்சல் இவைகளில்  கருத்து
சுதந்திரத்தை காப்பாற்ற, நாம் சிறைக்கு செல்லாமல் இருக்க சங்கம் தேவை.

சங்கம் என்பது கைது நடவடிக்கைகளுக்காக மட்டுமல்ல, சமூக நலனுக்காகவும் நாம் ஒட்டுமொத்தமாக குரல் கொடுக்க  பயன்படுத்தலாம்.

நமக்கு நாமே சில சட்டங்களை வகுத்துக்கொண்டு ஆபாச வார்த்தைகளை தவிர்க்கலாம், தமிழ் மொழியில் மொழி பெயர்ப்புகளை கொண்டுவரலாம்,
 பதிவர் சந்திப்பு போன்ற நிகழ்சிகளில் நமது நூல்களை வெளியிடலாம்,
நூல் வெளியிட ஆர்வம் இருந்தும்  பதிப்பகத்தை தொடர்பு கொள்ள இயலாவதருக்காக நாம்  வழிகாட்டலாம், விளம்பரங்களை  கூட நாம் பதிவுகளில் இட மொத்தமாக வாங்கலாம் - பலருக்கும்
பங்கிட்டு தரலாம்.

சங்கத்தினால் நாம் நன்மைகளை அடைகிறோமோ இல்லையோ துன்பத்தையாவது அடையாமல்  தவிர்க்கலாம்.


 சங்கத்தை  மனதில் வையுங்கள்.

நாம் உடனடியாக என்ன செய்யவேண்டுமெனில் தகவல் தொழில் நுட்ப சட்டம் 66A வில்  மாற்றங்களை கொண்டு வரவேண்டும் .  அதிகாரம் உள்ளவர்கள்  தவறாக பயன்படுத்தும்  வகையில்  இந்த சட்டம் உள்ளது.
அந்த சட்டம் அப்படி என்ன சொல்கிறது?

------------------------------------------------------------------------------------------------------------------------------


**[ 66A. Punishment for sending offensive messages through communication
service, etc..-* Any person who sends, by means of a computer resource or a
communication device,-

(a) any information that is grossly offensive or has menacing character; or

(b) any information which he knows to be false, but for the purpose of
causing annoyance, inconvenience, danger, obstruction, insult, injury,
criminal intimidation, enmity, hatred, or ill will, persistently makes by
making use of such computer resource or a communication device,

(c) any electronic mail or electronic mail message for the purpose of
causing annoyance or inconvenience or to deceive or to mislead the
addressee or recipient about the origin of such messages

shall be punishable with imprisonment for a term which may extend to three
years and with fine.


Explanation: For the purposes of this section, terms "Electronic mail" and
"Electronic Mail Message" means a message or information created or
transmitted or received on a computer, computer system, computer resource
or communication device including attachments in text, image, audio, video
and any other electronic record, which may be transmitted with the message.


[* Inserted vide Information Technology Amendment Act, 2008]

 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த சட்டப்படி நம் கருத்தால் பிறர் கோபமடைந்தாள் கூட நம்மீது வழக்கு தொடுக்க  முடியும்.  நாம்  அரசியல் பற்றி எழுத முடியாது. திரை  விமர்சனங்கள் கூட எழுத முடியாது.

அதாவது நாம் எந்த கருத்தையும் சொல்லக்கூடாது என்றே இந்த அதிகாரவர்க்கம் இந்த  மாதிரி ஒரு சட்டத்தை கொண்டு வந்துள்ளது. அவர்கள் நினைத்தால் நம் அனைவரையும்  இன்றே   சிறையில் அடைக்க முடியும்.

டிவிட்டரில் கருத்து சொன்னவர்களே இதுவரை  கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே சங்கத்தை மனதில் வையுங்கள் போராட்டத்தை டிவிட்டரில் இருந்தே தொடங்குவோம்.

அனைத்து  டிவிட்டர் உபயோகிப்பாளர்களும்  #ModifyIndianITAct66A என்று தங்களுடைய பெரும்பாலான டிவிட்டுகளில் பயன்படுத்தவேண்டும்.  நாளை  முதல்  இச்சட்டம் மாற்றியமைக்கப்படும் வரை நாம்   இதை செய்ய வேண்டும். நமக்கு தெரிந்த தெரியாத    பலரையும் இதை நாம் செய்ய
சொல்ல   வேண்டும்.   நமது குரல் நிச்சயம்  மாற்றத்தை  கொண்டு வரும்.
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள.

பதிவுலகிலும் நாம் ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரே பதிவை இடலாம் என்ற எண்ணத்தில் உள்ளோம். அதுபற்றி பின்வரும் கட்டுரைகளை படித்து உங்களது கருத்தையும்  ஆதரவையும் தாருங்கள்.
http://dharumi.blogspot.com/2012/11/601-i-t-act-section-66.html

http://anjaasingam.blogspot.com/2012/11/blog-post.html

 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு  நம்மில்   ஒற்றுமை நீங்கின் அனைவருக்கும்  சிறையே.

வெள்ளி, 26 அக்டோபர், 2012

சின்மயி கைது செய்யப்படுவாரா?

சின்மயி மீது வன்கொடுமை சட்டத்தின் அடிப்படையில் யாரோ புகார் தெரிவித்துள்ளார். அது மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக  ஒரு தனியார் தொலைக்காட்சியில் செய்திகள் வெளியாகியுள்ளன.

சின்மயி புகாரின் பேரில் சிலர் கைது செய்யப்பட்டதை நாம் அறிவோம். இப்பொழுது சின்மயி மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் யாரோ புகார் அளித்துள்ளனர். இதை அடுத்து அவர் கைது செய்யப்படுவாரா அல்லது வெறும் விசாரணையோடு நின்று விடுமா என்று தெரியவில்லை.

சின்மயி செய்த தவறுதான் என்ன?
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்ப்படையினரால்  சுடப்படுவது சம்பந்தமாக  அவரிடம்  சிலர் தொடர்ந்து ஆதரவு  கோரியபோது சின்மயி   "பைத வே மீனவர்கள் மீன்களை கொல்வது  பாவம் இல்லையா? " என்று டுவிட்டியதாக  தெரிகிறது.

இட ஒதுக்கீடு சம்பந்தமாக டுவிட்டும் பொழுது "சோ கால்டு தாழ்த்தப்பட்டவர்கள்"  என்றும் டுவிட்டியுள்ளார் என்றும் தெரிய வருகிறது. தாழ்த்தப்பட்ட சமுதாய  மக்கள் மனதும் மீனவ சமுதாய மக்கள் மனதும் புண்படும்படி அவர் கூறியுள்ளார் என  அவர் பேரில் புகார் கொடுக்கப் பட்டுள்ளதாக தெரிகிறது.

இணையத்தில் ஆபாச கருத்து மட்டுமல்ல நல்ல வார்த்தையில் மோசமான சிந்தனையை வெளிப்படுத்தினாலும் பிரச்சனை தான் எனபது இதன் மூலம் தெரியவருகிறது.

எனவே இணையத்தை உபயோகிப்பவர்கள் தங்கள் கருத்தில் கண்ணியத்தை கடைபிடிப்பது  நல்லது.

சின்மயி என்ன செய்யலாம்?
நான் ஏதோ ஒரு ஆவேசத்தில் அறியாமல் செய்துவிட்டேன் எனவே மக்கள் என்னை மன்னிக்கவும் என்பதுபோல பொது மன்னிப்பு கேட்பதுதான் சரி என்று தோன்றுகிறது.
அதேபோல சின்மயி பற்றி ஆபாசமாக பேசியது உண்மை எனும் பட்சத்தில் கைதானவர்களும்  மன்னிப்பு கேட்க வேண்டும்.

இருவரும் மன்னிப்பு கேட்டுக்கொண்டு மனிப்பு வழங்கிக்கொண்டு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்பதே பலரது விருப்பமாக இருக்கும் என நினைக்கின்றேன். அவர்களை தெரிந்தவர்கள் அதை செய்ய அறிவுறுத்த வேண்டுகிறேன்.



புதன், 24 அக்டோபர், 2012

சின்மயி விவகாரம் சின்மயி, பதிவர்கள், காவல்துறையினர் செய்ய வேண்டியது என்ன?



இது சற்று கவனத்துடன் கையாள வேண்டிய சிக்கலான  பிரச்சனை. எதிர் காலத்தையும் கருத்தில் கொண்டு சில முடிவுகளை எடுக்க வேண்டியது இங்கே அவசியம் என கருதுகிறேன்.

ஆபாசமான வார்த்தைகள் என்பது தமிழகத்தில் சில இடங்களில் மிகவும் சர்வ சாதரணமாக பேசக்கூடிய ஒன்று.

சில நண்பர்களுக்கு மத்தியில் இவைகள் சர்வ சாதாரணம். நண்பர்களுக்கு மத்தியில்  எந்த ஒரு பிரபலத்தை பற்றியும் எப்படியும் பேசுவார்கள்.இவர்களை எல்லாம் தண்டிக்க நினைத்தால் அது சாத்தியம்  இல்லை. அப்படி ஒரு சட்டம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. 

இப்படி நண்பர்களுக்கு மத்தியில் ஆபாசமாக பேசிக்கொள்பவர்கள் இணையத்தில் கருத்து பரிமாறிக்கொள்ளும் பொழுதும்  அதே சொல்லாடல்களை அவர்களுக்குள்  பயன்படுத்துகின்றனர். இது தவறுதான்.

சின்மயி: தன்னை நேரிடையாக ஆபாசமாக பேசியவர்களை காவல் துறையின்  உதவியுடன் தண்டிக்கும் உரிமை அவருக்கு  உண்டு. ஆனால் பல பிரபலங்களை பற்றி ஆபாசமாக பேசியதை அவர்கள் படம்  எடுத்து காட்டுவது என்பது தங்களுக்கு சாதகமாக பலரை திரட்ட வேண்டும், அவர்களுக்கு கண்டிப்பாக தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்ற  உள்  நோக்கத்தில் செய்யப்படுவதாக எனக்கு தோன்றுகிறது. . இதை செய்தது சின்மயியா அல்லது அவர்களது ஆதரவாளர்களா எனபது தெரியவில்லை.  
யார் செய்திருந்தாலும் இது சரியான செயல் அல்ல. ஏன் எனில் பல பிரபலங்களை பற்றி பலரும் ஆபாசமாக எழுதியுள்ளனர். எனவே அது பற்றி இவர்கள் தற்பொழுது  கவலைப்பட வேண்டாம். 

இங்கே சின்மயியும் சரி காவல் துறையினரும் சரி சிந்திக்க விடயம் ஒன்று உள்ளது.

அதாவது சின்மயியை  நேரிடையாக தாக்கியதற்கு உரியவர்களின் மேல் நடவடிக்கை எடுக்கலாம் தவறில்லை ஆனால் நண்பர்களுக்கு மத்தியில் ஆபாசமாக  சின்மயியை  பற்றி  பேசியதற்கு நடவடிக்கை எடுக்கலாமா எனபது தெரியவில்லை.ஏன் எனில் இது சில நண்பர்களுக்குள் பேசிக்கொண்டது.  

இங்கே அடுத்து வைக்கப்படும் வாதம் என்னவெனில் இணையம் என்பது பொது அங்கே பேசினால் அதை பலரும் அல்லது அவர்களில் நண்பர்கள் பலரும் படிக்க நேரிடும். இது தவறில்லையா? 

இது சரியான கேள்விதான்.

இங்கே ஒரு கேள்வி கேட்கிறேன் (சிந்திக்க மட்டுமே :) )
இணையம் அல்லாமல் தனியில் வெளியே  
இரண்டு நண்பர்கள் ஒரு பிரபலத்தை  பற்றி ஆபாசமாக பேசிக்கொள்கின்றனர். அங்கே இருக்கும் மூன்றாவது நண்பர் இவர்கள்  பேசியதை ஒலி /ஒளி  பதிவு செய்து அந்த பிரபலத்திடம் கொடுத்து விடுகிறார் அல்லது அதை இணையத்தில் ஏற்றிவிடுகிறார்.. இப்பொழுது அந்த பிரபலத்தின் மனம் புண்படும் தான் மறுப்பதற்கில்லை.ஆனால் இதை ஆதாரமாக வைத்து அந்த இருவரின் மீதும் நடவடிக்கை எடுப்பது சரியா?

சட்டத்தை உருவாக்குபவர்களும் நடைமுறை படுத்துபவர்களும்,பாதிக்கப்படுபவர்களும்  இதை கருத்தில் கொள்ள வேண்டும். இங்கு கொஞ்சம் சிந்திக்க வேண்டும். இது எதிர்காலத்தில் பல வழக்குகளுக்கு தீர்ப்பாக அமையும். 

மீண்டும் சொல்கிறேன் சின்மயியை  நேரிடையாக ஆபாசமாக பேசிய ஆதாரங்கள் இருக்குமானால் சம்பந்தப்பட்டவர்களின்  மீது நடவடிக்கை எடுக்க சின்மயிக்கு சகல உரிமையும் உண்டு. நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க கருணையின் அடிப்படையில் 
அவர்களை மன்னித்து விடவும் உரிமை உண்டு. எந்த முடிவையும் அவர்தான் எடுக்க வேண்டும். 

சின்மயி  மனம் எந்த அளவிற்கு  புண்பட்டிருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.  சம்பந்தப்பட்டவர்கள் தங்களது தவறை இந்நேரம் உணர்ந்திருப்பார்கள் என எண்ணுகிறேன். அவர்களின் செயல் இவ்வுலகிற்க்கே தெரிந்து விட்டது. இந்த கறை  அவர்களை விட்டு சீக்கிரம் மறையப்போவதில்லை. எனவே இதுவரை எடுத்த நடவடிக்கையே பெருமளவு தண்டனையை கொடுத்தது விட்டது. இனியும் அவர்களுக்கு தண்டனை வேண்டுமா எனபதை சின்மயிதான்  தீர்மானிக்க வேண்டும்.அவர் நல்ல முடிவை எடுக்கட்டும்.

காவல்துறையினர்,நீதிபதிகள்  செய்ய வேண்டியது: 
நான் முன்பே கூறியது போலநேரிடையாக பேசியதற்கு தண்டனை அளிப்பது  தவறல்ல. ஆனால் பல பிரபலங்களை பற்றி பேசியதற்கும், நண்பர்களுக்குள் சினமயியை பற்றி ஆபாசமாக பேசியதற்கும் நடவடிக்கை எடுக்கலாமா வேண்டாமா எனபதை ஆழ்ந்து சிந்தித்து செயல் படவேண்டும்.

மிக முக்கியமாக இணையத்தில் எந்த மாதிரியான வார்த்தைகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது என்று ஒரு குழு அமைத்து, கலந்தாலோசித்து அதை வெளியிட வேண்டும். அதை பின்பற்றி பலரும்  ஆபாசமான  வார்த்தைகளை தவிர்க்க இயலும். 

கைதானவர்கள் செய்ய வேண்டியது: அவர்கள்  உண்மையாக தவறு செய்திருப்பின் சின்மயிடம் மன்னிப்பு கோர வேண்டும்.இந்த மன்னிப்பு சின்மயி  இவர்களை மன்னிக்க உதவும்.  தவறு செய்யவில்லை என்று நினைத்தால் துணிந்து போராடலாம்.

கலைத்துறையினர் செய்யவேண்டியது: ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்துவதையும், ஆபாசமான காட்சிகளை வைப்பதையும் தவிர்க்க  ேண்டும். ஆபாசம் சமுதாயத்தில் பல பிரச்சனைகளை ஏற்ப்படுத்துகிறது. இதற்க்கு கலைத்துறையும் ஒரு காரணம் என்பதை இவர்கள் உணரவேண்டும். 

அரசியல்வாதிகள் செய்யவேண்டியது: மேடைக்கு மேடை நீங்கள் எதிர் கட்சியினரை ஆபாசமாக பேசிவிட்டு இணையத்தில் ஆபாசமாக பேசுபவர்களை தண்டிக்க சட்டம் கொண்டு வருதல் சரியாகுமா?  மேடையில் என்ன பேச வேண்டும் என்று  ஒரு நாகரிகம் தெரிய வேண்டாமா?  ஒரு தலைவன் எப்படி செயல்படுகிறானோ அப்படியே தொண்டனும். நல்லொழுக்கங்களை கடைபிடிக்க முயலுங்கள். 

பதிவர்கள் செய்ய வேண்டியது: எந்நேரத்திலும் எங்கும்  எப்பொழுதும் யாரை பற்றியும் ஆபாசமாக பேசுவதை தவிர்த்தல் நல்லது. இணையத்தில் மட்டுமல்ல தங்கள் வாழ்விலும் இதை கடைபிடித்தல்  நல்லது.. 

சிறு விமர்சனம்: ஏற்க்கனவே இணையத்தில் ஆபாசமாக எழுதிக்கொண்டிருப்பவர்களுக்கு கைதானவர்களை விமர்சிக்க என்ன உரிமை உள்ளது?

குறிப்பு: எனக்கு சின்மயியையும் தெரியாது, கைது செய்யப்பட்டவர்கள் பற்றியும் தெரியாது. ஒரு பதிவராக எனது கருத்தை பதிவு செய்கிறேன் அவ்வளவே. இதில் தவறான கருத்துக்கள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். திருத்திக்கொள்கிறேன்.

ஆபாசமான வார்த்தைகளை அனைவரும் அறவே தவிர்க்க வேண்டும். இணையத்திலும் சரி, வீட்டிலும் சரி, வெளியிலும் சரி. இதுவே நாட்டிற்கும், வீட்டிற்கும், தமிழிற்கும் நல்லது. 
என்றும் அன்புடன் 
இராச.புரட்சிமணி 

திங்கள், 22 அக்டோபர், 2012

ஜாதியை ஒழிப்பது எப்படி?

இந்தியாவில் இருக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று ஜாதி. ஜாதி அமைப்பு இன்றைய  கால கட்டத்திற்கு தேவையற்றது. தீண்டாமையை ஒழிக்க ஜாதியை ஒழிக்க வேண்டும். 

ஜாதியை ஒழிக்க எனக்கு தெரிந்து சில் வழிகள். உங்களது கருத்துக்களையும் கூறுங்கள்.

கல்வி கல்வி கல்வி.....மனிதத்தை பற்றிய கல்வி. இதுவே பல சமுதாய, உலக பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வாகும்.   

ஜாதி பிரச்சனயை  மனிதம் ரீதியில் அணுக வேண்டும்.
நாம் அனைவரும் மனிதர்களே  நம்மில் ஏற்றத்தாழ்வு பார்க்க கூடாது என்று மக்களுக்கு  புரிய வைத்தல் வேண்டும். கலை, கல்வி மற்றும் ஒவ்வொரு மனிதனின் ஈடுபாடு இதில் இன்றியமையாதது. 


கிராமங்கள் இருக்கும் வரை ஜாதி இருக்கும். நகர்மயமாக்கலை (விவசாயத்தை பாதிக்காமல்) துரிதப்படுத்துவதன் மூலம் ஜாதி வேறுபாட்டை குறைக்கலாம். இன்று நகரங்களில் ஜாதி பிரச்சனை இல்லை. 


ஜாதி சான்றிதழ் என்ற ஒன்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.அரசாங்கம்  ஜாதி சான்றிதழ்களை வழங்ககூடாது.

அந்நிய துணி எரிப்பு போராட்டம் நடந்தது போல் ஜாதி சான்றிதழ் எரிப்பு போராட்டம் நடத்த வேண்டும். அனைவரது ஜாதி  சான்றிதழ்களையும் தீயிட்டு கொலுத்த    வேண்டும்.


ஜாதி ரீதியான இட ஒதுக்கீட்டை  நிறுத்திவிட்டு விட்டு பொருளாதார ரீதியான இட ஒதுக்கீட்டை  செயல்படுத்த வேண்டும்.


கல்வியில் இட ஒதுக்கீடு   ஏழைகளுக்கும், பணக்காரர்களாக இருந்தும் கல்வி கற்காத குடும்பத்தினருக்கும் கிடைக்கும்படி வழிவகை செய்திடல் வேண்டும்.

வேலை வாய்ப்பில் ஏழைகளுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும்.

இவற்றில் சில நடைமுறை சிக்கல்கள் இருந்தாலும் அதை களைய நாம் முற்ப்பட வேண்டும். 




யாரும் எந்த விதத்திலும் ஜாதி பெயர்களை உபயோகிக்க கூடாது என்ற சட்டத்தை கொண்டு வரவேண்டும்.

 திருமணம் செய்யும் பொழுதும் யாரும் ஜாதி பார்க்க கூடாது என்ற சட்டத்தை கொண்டு வரவேண்டும்.

இதன் மூலம்  சில தலைமுறைகளுக்கு பிறகு ஒருவன்  எந்த  ஜாதியை சார்ந்தவன் என்று அவனே அறிய முடியாத நிலை ஏற்ப்படும்.  இதன் மூலம் ஜாதியானது முற்றிலும் ஒழிக்கப்படும்.

ஆனால் சுய நலவாத அரசியல் கட்சிகள் இதை செய்யப்போவதில்லை. ஜாதி ரீதியாக கணக்கெடுப்பு வேறு எடுத்து விட்டார்கள்.

 ஜாதி கணக்கெடுப்பு இன்றும் நடந்து கொண்டிருந்தாள் அதை நிறுத்த நீதிமன்றத்தை அணுகலாம் என்று நினைக்கின்றேன்.  ஜாதி கணக்கெடுப்பு எடுத்திருந்தாலும் அதை வெளியிட கூடாது என்று உயர், உச்ச நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்க வேண்டும்.  உங்களுக்கு தெரிந்து ஏதாவது வழக்கறிஞர் தெரிந்தால் சொல்லுங்கள். முதல் வேலையாக ஜாதி கணக்கெடுப்பு  கணக்கை முடிப்போம். பிறகு அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வோம்.

யாரெல்லாம் ஜாதி கணக்கெடுப்பை ஆதரிக்கின்றார்களோ அவர்கள் தீண்டாமையை  ஆதரிப்பதாகத்தானே அர்த்தம்?

மனிதனை மனிதனாக மட்டுமே பார்க்க வேண்டுமே ஒழிய அவனது ஜாதி,  மதம் இவற்றை பார்க்க கூடாது. ஜாதியும் மதமும் கண்டிப்பாக இந்தியாவில் அழிக்கப்பட  வேண்டியவை .இவற்றை அழிக்காத வரை இந்தியாவில் இந்தியர்களுக்கு மத்தியில் ஒற்றுமை என்பதை கொண்டு வருதல் சாத்தியம் இல்லை. மதங்களை ஒழிப்பது எப்படி என்று மற்றொரு பதிவில் பார்ப்போம். 

குறிப்பு: சட்டங்களை படிப்படியாக செயல்படுத்த வேண்டும். ஒரே இரவில் செயல்படுத்தினால்  ஒட்டு மொத்த மக்களும் எதிர்க்க செய்வார்கள். மக்கள் மனதில்  மாற்றத்தை,புரிதலை ஏற்ப்படுத்திக்கொன்டே சட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

செவ்வாய், 9 அக்டோபர், 2012

இன்றும் தீண்டாமைக்கு விதை எவ்வாறு தூவப்படுகிறது?


சில அடுக்குமாடி குடியிருப்புகளில்  தீண்டாமைக்கான விதை தெரிந்தோ தெரியாமலோ இன்று தூவப்படுகிறது. இந்த தீண்டாமைக்கான அடிப்படை ஜாதியோ,மதமோ, இனமோ அல்ல. 

சென்னையில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் மின்தூக்கிக்கு அருகே ஒரு வாசகம்   எழுதப்பட்டிருந்தது. எனக்கு இது கொஞ்சம் அதிர்ச்சியையே   தந்தது.
அந்த வாசகம் என்ன சொல்கிறது எனில்  வியாபாரிகளும், தண்ணீர் கொண்டுவருபவர்களும், சிலிண்டர்  கொண்டு வருபவர்களும்  மின் தூக்கியை பயன்படுத்த கூடாதாம்.  மூன்று மாடி உள்ள கட்டிடத்தில் எப்படி அவர்கள் அவ்வளவு எடையை தூக்கிக்கொண்டு வருவார்கள் எனபதை ஏன் இவர்கள் சிந்திக்க வில்லை? 

மேலும் அந்த குடியிருப்புகளில்  வேலை செய்யும் வேலைக்கார  பெண்களும் மின் தூக்கியை உபயோகிக்க கூடாதாம்.  இன்று வேலைக்காரிக்கு மின்தூக்கி மறுக்கப்படுகிறது. நாளை இந்த வேலைக்காரியின் மகனுக்கும், மகளுக்கும் கூட இதே குடியிருப்பில் மின்தூக்கி மறுக்கப்படலாம். இதை தீண்டாமை என்று சொல்லாமல் என்னவென்று சொல்வது?

கவனிக்க இங்கே சிலிண்டர் கொண்டுவருபவர்கள் வீட்டு வேலை செய்பவர்கள்  என்ன ஜாதி, மதம் என்று  யாருக்கும் தெரியாது. அதேபோல்  அடுக்குமாடிகளில்  குடியிருப்பவர்கள் எல்லா ஜாதியையும் மதத்தையும் சார்ந்தவர்களாக இருப்பார்கள். 
இருப்பினும் ஏன் இந்த தீண்டாமை என்றால் அவர்கள் சாதாரண வேலைக்காரர்கள்  என்ற மனப்பான்மைதானே? அல்லது வேறு காரணமா? காரணம் என்ன என்பதை உங்களது சிந்தனைக்கே விட்டு விடுகிறேன். சென்னையில் இந்த மாதிரி பல இடங்களில் மின்தூக்கி தீண்டாமை நிலவுவதாக அறிகிறேன். 

மும்பையில் ஒரு 27 மாடி அடுக்கு குடியிருப்பு, நல்லவேளை இங்கே அவர்களை மின்தூக்கியை பயன்படுத்தக்  கூடாது என்றெல்லாம்  சொல்லவில்லை மாறாக இந்த மாதிரி  வேலை செய்பவர்களுக்கு என்று தனி மின்தூக்கி அமைத்திருந்தார்கள். இதிலும் வேலை  செய்பவர்களின் குழ்தைகளுக்கு பொது மின்தூக்கி அனுமதியில்லை என்றே நினைக்கின்றேன். வீட்டு வேலை  செய்பவர்களுக்கு  தனி மின்தூக்கி எனபதும் தீண்டாமைதானே? அல்லது வேறு என்ன என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.

இவைகளை நீங்கள் ஆதரிக்கிறீர்களா  அல்லது எதிர்க்கிறீர்களா என்பது எனக்கு தெரியாது .இதில் சில நியாங்கள் இருப்பதாக சிலர் உணரலாம். சிலர் இது தவறு என்று என்னலாம். 

இந்தமாதிரி அந்தகாலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட சில செயல்கள் கூட  சில   தீண்டாமைக்கு அடிகோலியிருக்கும் என நான் எண்ணுகிறேன். 

இன்று செய்யப்படும் இந்தமாதிரி செயல்கள்  எதிர்காலத்தில்   தீண்டாமையாக  பார்க்கப்படலாம்,ஒருவேளை இன்று இவைகள் தீண்டாமையாக பலரால் பார்க்கப்படாத பட்சத்தில்.

ஏன் நமது அரசியல் கட்சிகள் இவற்றை கண்டுகொள்வதில்லை. இவற்றை தீண்டாமையாக அவர்கள் கருதுவதில்லையா? அல்லது அடுக்கு மாடிகளில்  குடியிருப்பவர்களின் ஓட்டுக்கள் கிடைக்காது என்பதாலா? அல்லது வேலை செய்பவர்கள் எல்லா ஜாதியிலும் இருக்கிறார்கள் எந்த ஜாதி பேரை சொல்லி ஒட்டு வாங்குவது என்று தெரியவில்லையா?

தீண்டாமைக்கான விதை எவ்வாறு தூவப்படுகிறது எனபதை நான் மறைவாகவே சொல்லியுள்ளேன்.

இவற்றை எப்படி ஒழிப்பது என்பது உங்கள் ஒவ்வொருவருக்கும் தெரியும் என்றே நினைக்கின்றேன்.

இவற்றை எதிர்க்கும் எண்ணம் எனக்கு இருந்தாலும் அந்த நிலையில் இன்று  நான் இல்லை.  நான் சொல்லி இவற்றை யார் திருத்த முன்வருவர்? உங்களால் இவைகளை ஒழிக்க முடியும் என்று எண்ணினால் துணிந்து செய்யுங்கள்.என்னுடைய ஆதரவு உங்களுக்கு உண்டு. உங்கள் கருத்துக்களையும்  பதிவு செய்யுங்கள். தீண்டாமையை ஒழிப்பது எப்படி என்பது பற்றி கொஞ்சம் நாட்களுக்கு பிறகு பதிவிடுகிறேன்.  ஜாதி,மதம் என்பது பிரிவினைவாதிகளின் சதியே இவற்றை அழிக்க வேண்டுமா வேண்டாமா என்பதை பற்றி சிந்தியுங்கள். 

என்றும் அன்புடனும் உண்மையுடனும் 
இராச.புரட்சிமணி 

வெள்ளி, 5 அக்டோபர், 2012

இந்து மதம் தான் தீண்டாமைக்கு காரணமா? நீங்கள் இல்லையா?


 இந்து மத புத்தகங்களில் வர்ணாசிரமம் பற்றி  இருக்கிறது அதனால் தான் இந்தியாவில் ஜாதி/தீண்டாமை   பிரச்சனை என்று  பல அறிவாளிகள்   கூறுகின்றனர்.  என்னைப்பொறுத்தவரை இது ஒரு அறிவிலித்தனமான கூற்று.

இந்தியாவில் இருந்த/ இருக்கும் பிரச்சனைகளில்  ஒன்று ஜாதி. இந்த ஜாதி பிரச்சனைகளுக்கு காரணம் இந்து மதம் தான் என்று ஒரு சிலர் அல்லது பலர்  கூறலாம்.

இந்த மாதிரி ஜாதி பிரச்சனைகளில்/தீண்டாமையில் ஈடுபடும் எவனும் இது இந்து மதம் சொல்கிறது அதனால் இதை செய்கிறேன் என்று சொல்லமாட்டன்.  


வர்ணாசிரமம் பற்றி கூறும் ஒரு சில குறிப்புகள் கொண்ட  நூலை பற்றி ,அந்த வசனங்கள் பற்றி தீண்டாமையில் ஈடுபடுபவர்களுக்கும்   சரி,  ஈடுபடாதவர்களுக்கும் சரி ஒன்றும் தெரியாது எனபதே உண்மை. (வர்ணாசிரமம் பற்றி அப்படி என்ன கூறப்பட்டுள்ளது என்பது பற்றி பிறகு பார்ப்போம்.)

ஏன் எனில்பெரும்பாலான இந்திய மக்கள்   இவற்றை  இந்து மத நூல்களாக ஏற்று இரவும் பகலும் படித்து  இறைவன் தந்த வேதம் என்று போற்றுவதில்லை.  கிருத்துவமானாலும் சரி, இசுலாமானாலும் சரி குறைந்தது வீட்டிற்கு ஒரு புனித நூல், அதிக பட்சம் ஆளுக்கு  ஒரு நூல் வைத்திருப்பார்கள்.  ஆனால் மேற்கூறிய இந்த ஜாதி பற்றி கூறும்  இந்து மத நூல்கள் ஊருக்கு ஒன்று இருப்பதே அபூர்வம்.   அப்படி இருக்க  இந்த  மத  நூல்களால் தான் சில பல   இந்தியர்கள் / இந்துக்கள்   தீண்டாமையில் ஈடுபடுகின்றனர் என்பதை எப்படி ஏற்க இயலும்?


தீண்டாமை  ஒரு பெருங்குற்றம் தான் . மனிதத்தன்மையற்ற செயல்தான் அதில் ஈடுபடுபவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான். ஆனால்  தண்டனை யாருக்கு தரப்பட வேண்டும்  தீண்டாமையில் ஈடுபட்டவர்களுக்குத்தானே ? அவர்களை மட்டும் தானே  குற்றவாளிகளாகப்  பார்க்க வேண்டும்? அதை விடுத்து   ஒட்டு மொத்த சமுதாயத்தையும் ஜாதி வெறி பிடித்த  இந்துக்கள்  என்று சொல்வது எப்படி முறையாகும்?

எப்படி ஒரு மதத்தை சார்ந்தவன் தவறு செய்தால் ஒட்டு மொத்த மதத்தையும், ஒரு நாட்டை சார்ந்தவன் தவறு செய்தால் ஒட்டு மொத்த நாட்டையும் குறை செல்வது தவறோ அதைப்போலத்தான்  ஒருவன்  செய்யும் தவறுக்கு ஒட்டு மொத்த இந்தியாவையும், இந்துக்களையும் குறை சொல்வதும் தவறாகும். 

உலகில் எல்லா நாடுகளிலும், எல்லா மதங்களிலும் உள்ளது போல் இந்தியாவிலும் எல்லா மதங்களிலும்  தீண்டாமை இருப்பதை மறுப்பதற்கில்லை. இவைகள் கண்டிப்பாக ஒழிக்கப்பட வேண்டியவை.  தீண்டாமையை ஒழிக்கும் வழிகளை ஆராயும் முன் தீண்டாமைக்கு காரணம் என்ன என்பதை பற்றி பார்க்க வேண்டும்.


நீங்கள் தீண்டாமையில் ஈடுபடவில்லையா? 

இன்றைய சூழ்நிலையில் உலகில் பெரும்பாலானோர் குற்றமாக கருதப்படும் தீண்டாமையில் ஈடுபடவில்லை என்றாலும் குற்றமாக கருதப்படாத, ஏன் தீண்டாமை என்றே அறியாமல் பல தீண்டாமைகளை  இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவரும் செய்துகொண்டுதான் வருகின்றோம். 

நான் என்ன சொல்கிறேன் நீங்களும் தீண்டாமையில் தான் ஈடுபடுகிறீர்கள் ஆனால் என்ன அது சட்டத்தால், சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது. இந்த தீண்டாமைக்கு மூல காரணம் என்னவெனில் ஒரு மனிதன் தன்னை விட மற்றொருவனை தாழ்வாக நினைப்பதுதான். நான் இந்த விதத்தில் உயர்ந்தவன் அவன் அந்த விதத்தில் தாழ்ந்தவன் என்று நாம் ஒவ்வொருவரும் ஒரு அளவுகோலை  வைத்துள்ளோம்.

இல்லை நான் தீண்டாமையில் ஈடுபடுபவன் இல்லை என்கிறீர்களா?
இதோ என்  கேள்விக்கு பதில் சொல்லுங்கள் பார்ப்போம்...பின்வரும் கேள்விக்கு ஒரு கேள்விக்கு நீங்கள் இல்லை என்று பதில் சொன்னாலும் நீங்கள் தீண்டாமையில் ஈடுபடுகின்றீர்கள் என்று தான் பொருள். கேள்விக்கு தயாரா? 

உங்கள் மகளை நீங்கள் ஒரு பிச்சைக்காரனுக்கு  மணம் முடித்து  வைத்துள்ளீர்களா? வைப்பீர்களா? 

உங்கள் மகனுக்கு   பிச்சைக்கார  பெண்ணை மணம் முடித்து வைத்துள்ளீர்களா? வைப்பீர்களா?

 நீங்கள் உண்ணும் தட்டில் பிச்சைக்காரனுக்கு உணவளித்துள்ளீர்களா ?  உணவளிப்பீர்களா?

பிச்சைக்காரன் உண்ட தட்டில் நீங்கள் உணவு உண்டுள்ளீர்களா? உண்பீர்களா?


அனைத்து கேள்விகளுக்கும் நீங்கள் இல்லை என்றுதான் பதில் சொல்லி இருப்பீர்கள். ஏன் எனில் நீங்கள் அவர்களை மனிதர்களாக மதிக்கவில்லை.
நீங்கள் பிச்சைக்காரனைவிட  உங்களை உயர்வாக எண்ணுகிறீர்கள்.
இதற்க்கு காரணம் பல. இதற்க்கு  என்ன காரணம் என்று உங்கள் ஒவ்வொருவரின் மனசாட்சிக்கும் நன்கு தெரியும்.

 எந்த வகையான தீண்டாமையையும்  எந்த வகையிலும் நான் நியாப்படுத்த வில்லை.மாறாக காரணத்தைத்தான் அலசுகிறேன் என்பதை மனதில் வையுங்கள்.


இன்றைய இணைய உலகத்திலேயே, பெரிய படிப்பெல்லாம் படித்து விட்ட  நீங்களே, தீண்டாமை ஒழிப்பு பற்றி பேசும் நீங்களே  தீண்டாமையில் ஈடுபடும்பொழுது பண்டைய காலத்தில் வாழ்ந்த மக்கள் தீண்டாமையில் ஈடுபட்டிருப்பதில்   என்ன வியப்பு? என்ன அசிங்கம்? 
சரி இதை விடுங்கள்....

பணமும் தீண்டாமைக்கு வித்திடுகிறதா இல்லையா? 

என்னதான் உயர்த்தப்பட்ட ஜாதி, தாழ்த்தப்பட்ட ஜாதி என்று இருந்தாலும் அவர்களுக்கு மத்தியிலும்  தீண்டாமை உண்டா இல்லையா?
ஒரே ஜாதியில் இருந்தாலும்  பணக்காரன் ஏழைக்கு பெண் தரமாட்டான்
ஒரே ஜாதியில் இருந்தாலும்  பணக்காரன்  ஏழையை  வீட்டிற்கு   கூப்பிட்டு தன்னுடைய தட்டில் உணவளிக்க மாட்டான்.
உண்மையா இல்லையா? இதுவும் தீண்டாமை தானே? என்ன இது குற்றமற்ற தீண்டாமை.


மிருகங்களிடத்திலும் தீண்டாமையா? 
அறிவியல் படித்திருப்பவர்களுக்கு  தெரியும். ஒரு மிருகம் இனப்பெருக்கத்திற்கு எப்படி தன்னுடைய  இணையை தேர்ந்தெடுக்கின்றது என்று. எல்லா விதத்திலும் உயர்ந்த,சிறந்த  ஒரு ஆண் மிருகத்தைத்தான்  பெண் மிருகங்கள்  தேர்ந்தேடுக்குமாம். இங்கே சிறந்தது என்பது  வீரமாக இருக்கலாம், உடல் பலமாக  இருக்கலாம்,அழகாக இருக்கலாம், தனக்கு பிடித்த மாதிரியான  உடல் வாசனையாக  இருக்கலாம், நோயற்ற தன்மையாக  இருக்கலாம். (ஆண் தேர்ந்தெடுக்கும் பொழுதும் அப்படித்தான்......வன்புணர்ச்சிகள் எனபது  வேறு). தன்னுடைய எதிர்கால சந்ததிகள் நன்றாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான்  இப்படி மிருகங்கள் கூட இனையைத்தேர்ந்தேடுக்கும் பொழுது  சில அளவுகோலை வைத்துள்ளது. இதுவும் யாரை தீண்டக்கூடாது என்பதற்கான ஒன்றுதான். இதுவும் தீண்டாமைதான்.

காதல் கலப்பு மணத்தில் தீண்டாமை ?
இன்றும் மனிதர்களுக்கு மத்தியில்  என்னதான் கலப்பு மனங்கள் காதல் மனங்கள் நடக்கின்றது என்றாலும். தன்னுடைய வசதிக்கு,அழகிற்கு  படிப்பிற்கும் தகுந்த முறையில் தான் நடக்கின்றதே தவிர எவனும் அல்லது எவளும் எதையும் பார்க்காமல் காதலிப்பதில்லை.இதிலும் தீண்டாமை இன்றளவும் உண்டு.  (ஒரு சில விதிவிலக்குகள் இருக்கலாம்? ).

நண்பர்களுக்கு மத்தியில் தீண்டாமை ?
ஏன் நண்பர்களை தேர்ந்தெடுக்கும் பொழுதும் கூட இன்று ஜாதியை பார்க்காமல் இருக்கலாம் ஆனால் வசதி, படிப்பு, ஒத்த  சிந்தனை, பழகும் விதம், பேசும் விதம், ஒழுக்கம்   என பல அளவுகோல்கள் தெரிந்தோ தெரியாமலோ பயன்படுத்தப்படுகிறது.  இதுவும் ஒரு தீண்டாமை  தானே?

ஜாதி வீட்டு ஜாதி திருமணம் செய்ய மறுக்கிறார்கள் ஜாதி வெறியர்கள் என்று குரல் கொடுக்கின்றனர். இதுபோல் தான்  யாரும் மதம் விட்டு மதம் யாரும் திருமணம் செய்வதில்லை. இதுவும் ஒரு தீண்டாமைதானே?


இந்தியாவில் இந்து மதத்தில் இதுவும் தீண்டாமையா?

இந்து மதத்தில் ஜாதிக்கு ஒரு மயானம் - இது தீண்டாமையாக பார்க்கப்படுகிறது.
ஏன் பல தெய்வங்கள்/இறைவன்கள் இருப்பதையும் சிலர் குறை கூறுகின்றனர்.
சிலர் சில கோயிலுக்கு போவதே இல்லை 

இதை விளக்க ஒரு குட்டி கதை சொல்லலாம் என்று நினைக்கின்றேன்.

"தீடிரென்று  இன்று வேற்று கிரகத்தில் இருந்து சிலர் பூமிக்கு வந்துவிடுகின்றனர். அவர்கள் உலகின் பல நாட்டு அரசியல்வாதிகளை சிறையில் அடைத்துவிட்டு, இவ்வுலகையே அவர்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருகின்றனர்.
அவர்கள் பின்பற்றுவது புண்ணாக்கு மதம். இந்த பூமியில் பின்பற்றப்பட்ட பிறமதங்களை அவர்கள் பூமி மதம் என்று பெயரிட்டு விடுகின்றனர்.

சில  தலைமுறைகள் கடந்துவிட்டன  வேற்று கிரக வாசிகள் தங்களை அடிமைபடுத்தியுள்ளதால் பூமியை சேர்ந்தவர்கள், பூமி மதத்தினர் ஒட்டுமொத்தமாக அவர்களை எதிர்க்கின்றனர். (இப்பொழுது இவர்கள் பல மதங்களை சார்ந்தவர்கள் எனபதே அவர்களுக்கு தெரியாது) 
  இவர்களின் ஒற்றுமையை சீர்குலைத்தால் தான், அவர்களுக்கு இடையே சண்டை உருவானால் தான் நாம் நிம்மதியாக சுரண்ட முடியும் வாழ முடியும் எனபதை  வேற்று கிரக புண்ணாக்கு  மதத்தினர் உணர்கிறார்கள். வேற்று கிரக வாசிகள் பூமி மதத்தில் இருக்கும் வேறுபாடுகளை பார்க்கின்றனர். இவற்றை பல தந்திரங்கள் மூலமாக பெரிதாக்குகின்றனர். பூமி மதத்தினரின் ஒற்றுமையை சீர்குலைக்கின்றனர். 

 இப்பொழுது புண்ணாக்கு மதத்தினர் "எங்கள் மதமே சிறந்தது, உங்கள் மதத்தில்  பல தீண்டாமைகள் உள்ளன. உங்கள் மதத்தில்  சிவனுக்கு ஒரு கோயில், அல்லாவுக்கு ஒரு கோயில், ஏசுவுக்கு ஒரு கோயில். அல்லாவை வழிபடுபவர்கள் அந்த கோயிலுக்குள் பிற கடவுளை வணங்குபவர்களை அனுமதிப்பதில்லை. அதுபோலவே பிற இறைவன் கோயிலுக்கும் பிறர் போவதில்லை. தீண்டாமை  எப்படி தலை விரித்தாடுகிறது பாருங்கள்.

அதுமட்டுமா சிவனை வணங்குபவர்கள் பிணத்தை தனியாக ஒரு மயானத்தில் எரிக்கின்றனர். அல்லாவை வணங்குபவர்களுக்கு தனியாக பிணத்தை புதைக்க ஒரு மயானம், கர்த்தரை வணங்குபவருக்கு தனியாக ஒரு மயானம். உங்கள் மதத்தில் பாருங்கள் எவ்வளவு தீண்டாமை.எத்தனை இறைவன்கள். எனவே இந்த தீண்டாமையிலிருந்து தப்பிக்க நீங்கள் எங்கள் புண்ணாக்கு மதத்திற்கு மாறுங்கள்" என்று கூற ஆரம்பித்து விடுகின்றனர்.



இந்த  கதையில் நீங்கள் பூமியை இந்தியாவிற்கும், பூமி மதத்தை இந்து மதத்திற்கும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் பல உண்மைகள் உங்களுக்கு தெரியும்.  நூற்றுக்கு நூறு இக்கதை பொருந்த விட்டாலும் பெருமளவிற்கு பொருந்தும். 


இன்றைய இந்து மதம் என்பது பல சமயங்களின் சங்கமம், பல மதங்களையும் ஏதோ ஒரு காரணத்தால் யாரோ இந்து மதம் என்று அழைத்து விட்டனர்.அதனால் தான் பல வித்தியாசங்கள், சிக்கல்கள்  இந்து மதத்தில் உள்ளது

பூமி மதத்தில் எப்படி தீண்டாமை உருவானதோ அப்படித்தான் இந்தியாவிலும் தீண்டாமை உருவாகி இருக்க வேண்டும். 

என்னதான் தீண்டாமைக்கு காரணம் கூறினாலும். இரட்டை குவளை முறை, தாழ்த்தப்பட்டவர்களை பஞ்சாயத்து தலைவர்களாக ஏற்க்க மறுத்தல் போன்ற விடயங்களில் அரசாங்கம் உடனடியாக தலையிட்டு அவர்களுக்கு புரிய வைக்க முயல வேண்டும்(பல கிரமாங்களில் இந்நிலை இல்லை சில கிராமங்களில் மட்டுமே குறிப்பாக மதுரை பக்கத்தில் இது இருப்பதாக கேள்வி).  வேண்டும் என்றே புரிந்து கொள்ள மாட்டேன் என்று தீண்டாமையை ஆதரிக்கும் செயல்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். குற்றமான தீண்டாமையை உடனடியாக ஒழிக்க வேண்டும்.

குற்றமான தீண்டாமையையும் குற்றமற்ற தீண்டாமையையும் அழிக்க முடியுமா என்றால் நிச்சயம் முடியும். அது எப்படி என்பதை பற்றி  மற்றொரு பதிவில் பார்ப்போம். 


இப்பதிவின் நோக்கம் யாரையும் புண்படுத்துவது அல்ல, மாறாக என்னுடைய சிந்தனைகளை பகிர்ந்து கொள்வதே, தீண்டாமையின் மூலத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே.   இப்பதிவில் எங்கு தவறு இருந்தாலும் சுட்டி காட்டுங்கள் உடனடியாக திருத்திக்கொள்கிறேன். தீண்டாமைக்கான காரணங்களை அலசியுள்ளதால் தீண்டாமைக்கு நான்  ஆதரவு என்று யாரும் எண்ண  வேண்டாம். தீண்டாமை, ஜாதி, மதம் இவற்றை கண்டிப்பாக அழித்தே ஆக வேண்டும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். தீண்டாமைக்கு காரணம் இந்தியாவும் அல்ல இந்து மதமும் அல்ல மனிதர்களே என்று நான் உறுதியாக  கூறுகிறேன். இதை நீங்களும் ஏற்ப்பீர்கள் என நம்புகிறேன். 

இவன்
 உங்களைப்போலவே சில இடங்களில் தீண்டாமையால் பாதிக்கப்படுபவனும்,   சில இடங்களில் தீண்டாமையில் ஈடுபடுபவனும், தீண்டாமையை அழிக்க விரும்புபவனுமாவான். 

என்றும் அன்புடனும்  உண்மையுடனும்
இராச.புரட்சிமணி


வெள்ளி, 28 செப்டம்பர், 2012

இந்து மதம், இந்திய நாடு என்ற பெயர் எப்படி வந்தது?


சிந்து நதியின் பெயரிலிருந்து  இந்து, இந்தியா என்ற பெயர் வரவில்லை மாறாக அது நாடு சார்ந்தது, மதம் சார்ந்தது என்பதை பற்றி பார்ப்போமா? 

 சிந்து கருத்து என்னவெனில் சிந்து நதிக்கு அப்பால் இருந்தவர்கள் சிந்து நதியோரம் வசித்தவர்களையும், அதை தாண்டிய நிலப்பரப்பையும் அவர்கள்  மொழியில் ஹிந்த் என்று சொல்ல ஆரம்பித்து, அது கிரக்கேர்கள் மூலம், ஐரோப்பிய   மொழிகளுக்கு சென்று ஆங்கிலேயர்களால் இந்தியா என்று அழைக்கப்பட்டது . 

ஆனால் இந்த கருத்து தவறானது  இந்து மதம், இந்திய நாடு என்பதற்கு மூலம் வேதத்தில் உள்ளது என்பது  மாற்று கருத்தாகும். 

 பழமையான ரிக் வேதத்திலேயே(கி. மு. 1700 முதல் 1100 வரை)  இந்து, இந்துஸ்தான் என்ற பெயர்கள் இடம்பெற்றுள்ளன என்பதற்கான ஆதாரம் இதோ 

-------------------------------------------------------------------------------------------------------------
हिमालयं समारभ्य यावदिंदुसरोवरम् ।
तं देवनिर्मितं देशं हिंदुस्थानं प्रचक्ष्यते ।।
"The land created by the gods which stretched from the Himalayas to the Indu (i.e. Southern) ocean is called Hindusthan
 -----------------------------------------------------------------------------------------------------------

Himalyam Samarabhya
Yavadindusarovaram
Tam Deonirmitam Desham
Hindusthanam Prachakshate
Translation: "The country which starts from Himalayas and the borders of which reach till the Indian Ocean (Indu Sarovaram), has been created by devas and its name is Hindusthan.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இமயமலையில்  தொடங்கி  இந்திய பெருங்கடல்  வரை எல்லை  கொண்டிருக்கும்  நாட்டை  தேவர்கள் (இறைவன்கள் )  படைத்தனர் அதன் பெயர்  இந்துஸ்தான்  என்று ரிக் வேதம் கூறுகின்றது.



வேதங்களின் படியும் இந்திய அரசிலமைப்பின்படியும்  இந்து, இந்தியா என்ற பெயர் எப்படி, யாரை குறிக்கின்றது  என்று பார்த்தோம். மற்றொரு பதிவில் இந்து மதம் என்பது உலகெங்கிலும் எப்படி இருந்தது, இருக்கின்றது, எப்படி உலகில் பெரும்பாலான மக்கள் இந்துக்களே என்பதை பற்றி பார்ப்போம். 

என்றும் அன்புடனும் உண்மையுடனும் 
இராச.புரட்சிமணி

பிற்சேர்க்கை: 
ரிக் வேதத்தில் விக்கி கூறும் பிரகஸ்பதி சுலோகம் இல்லை. எனவே விக்கியில் தவறு நிகழ்துள்ளது.  பிரகஸ்பதி சுலோகம் எப்பொழுது இயற்றப்பட்டது என்பதற்கான விவரங்கள் தெரியவில்லை. 

சிந்து நதியின் பெயரால் தான் இந்து/இந்தியா என்ற பெயர் வந்திருந்தாலும் அது ஆங்கிலேயேர்கள் கூறுவது போல  எட்டாம் நூற்றாண்டில் முதன் முதலில் அராபியர்களால்  இது பயன்படுத்தப்படவில்லை. அதற்கு  .முன்பே  இந்து, இந்தியா என்ற பெயர் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது என பின்வரும் கட்டுரை கூறுகிறது. இந்து, இந்தியா என்ற சொல்லானது கிரேக்கர்களாலும் ஏன் அசோகர் காலத்தில் கூட இந்து, இந்தியா என்பதற்கு ஒப்பான சொல் புழக்கத்தில் இருந்துள்ளது.


சௌரட்டியர்களின் புனித நூலான பால்வி அவெஸ்தா என்ற நூலில் 'சப்த சிந்து' என்று சொல்லுக்கு பதிலாக 'ஹப்த ஹிந்து' என்று குறிபிடப்பட்டுள்ளது. இந்த அவெஸ்தா கி.மு. 1000 முதல் 5000 ஆண்டுகளில் இயற்றப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. எனவே ரிக் வேதத்தை போல ஹிந்து என்ற சொல்லும் பழமையானதே என்று இக்கட்டுரை கூறுகின்றது. 

வியாழன், 27 செப்டம்பர், 2012

மீண்டும் முதல்வராக அம்மா என்ன செய்ய வேண்டும்?


சில அரசியல் தந்திரங்களை பற்றி அம்மாவிற்கு தெரிவிக்கலாம் என்ற எண்ணத்தில் இப்பதிவை எழுதுகிறேன். 

அவர்களுக்கு தெரியாததா எனக்கு தெரியப்போகிறது? உண்மைதான். இருப்பினும் நான் மனதில் நினைப்பவைகளை    பதிவு செய்யலாம் என்ற எண்ணம்தான்.

௧. விஜயகாந்தை கழட்டி விடவேண்டும்....(நான் நினைத்தேன் இதை அம்மா செய்து விட்டார்கள்)

௨.தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க கூட்டணி,தி.மு.க கூட்டணி என்று கண்டிப்பாக  அமைய அனுமதிக்க கூடாது. மூன்றாவது அணி  அமைவதுதான் அம்மாவிற்கு நல்லது. 

௩.  விஜயகாந்தும், தி.மு.கவும் கூட்டணி வைக்க கண்டிப்பாக அனுமதிக்க கூடாது. 

௪. மூன்றாவது அணியாக, காங், தே.மு.தி.மு.க, ம.தி.மு.க, கம்யுனிஸ்ட், பா.ம. க,இ .ஜ .க  என அமைய கண்டிப்பாக அனுமதிக்க  கூடாது. மூன்றாவது அணியும், இரண்டவாது அணியும் சமபலத்துடன் இருக்க வேண்டும். அம்மா  பலத்தை விட குறைவாக. முடிந்தவரை சில கட்சிகளை கூட்டணிக்குள் இழுத்துக்கொள்ள வேண்டும். 

௫. தேர்தலுக்கு முன்பு கண்டிப்பாக மின்வெட்டை முற்றிலும் ஒழிக்க வேணும்.

௬. ஊழலற்ற அரசை தர வேண்டும்.

௭. பெரும்பாலான மக்கள் மனம் கோணாமல் ஆட்சி நடத்த வேண்டும்.

இவை நடந்தால் அம்மா மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி.......
அவசரமாக வெளியே கிளம்புவதால் சில மணித்துளிகளில் எழுதிய  பதிவு இது.....உங்கள் ஆலோசனைகளையும் நீங்கள் தரலாம். 
மற்றொரு பதிவில் தி.மு.க எப்படி ஆட்சியை பிடிக்கலாம்  என்பது பற்றி பார்ப்போம்.

திங்கள், 24 செப்டம்பர், 2012

இசுலாமிய சவுதியில் (அரசியல்) தீண்டாமை இல்லையா?


சவுதியில் வசிக்கும் ஒரு சில வாகாபிய இசுலாமிய பதிவர்கள் இந்து மதத்தில் தீண்டாமை உண்டு அதனால் இசுலாமிற்கு மாற வேண்டும், தீண்டாமையை ஒழிக்க இசுலாம்  தான் அருமருந்து என்று பிரச்சாரம் செய்வதை படித்திருப்பீர்கள். 

சவுதியில் இருக்கும் தீண்டாமை பற்றி இவர்கள் இதுவரை வாய் திறந்திருப்பர்களா? ஏன் இசுலாமினால் அந்த தீண்டாமையை  ஒழிக்க முடியவில்லை?. தீண்டாமைக்கு காரணமே வாகாபிய  இசுலாம்தானே பின்பு எப்படி இசுலாம் தீண்டாமையை ஒழிக்கும்?.

இசுலாமில் ஷியா, சுன்னி என்று இரு பிரிவுகள்  (பல பிரிவுகள் இசுலாமில் உள்ளது என்பது வேறு விடயம்) உள்ளன. சவுதியில் பெரும்பான்மையானோர் சுன்னி பிரிவை  சேர்ந்தவர்கள். சுன்னி பிரிவை  சேர்ந்தவர்கள் கையில் தான் ஆட்சி அதிகாரம்  உள்ளது.வாகாபிய இசுலாமை சவூதி அரசு ஊக்குவிக்கிறது. வாகபிய இசுலாம் என்பது சுன்னி பிரிவின்  அங்கம் . இந்த வாகபிய இசுலாமை வளர்க்கும் சுன்னி  பிரிவினர்/ அரசாங்கம்   பத்து சதவீதம் முதல்  பதினைந்து சதவீதம்  உள்ள ஷியா சிறுபான்மையினருக்கு எந்த வித உரிமையும் தருவதில்லை. 

அது பொருளாதார ரீதியாக ஆகட்டும், அரசியல் ரீதியாக  ஆகட்டும், அரசாங்க வேலையாக ஆகட்டும் ஷியா பிரிவு மக்களை இவர்கள் கிட்டயே நெருங்க விடுவதில்லை.

அதுமட்டுமல்ல மத ரீதியாகவும் ஷியா பிரிவு மக்களுக்கு இவர்கள் தொந்தரவு செய்கிறார்கள்.

ஷியா பிரிவு மக்கள்  மசூதி கட்ட  கூட இவர்கள்  அனுமதிப்பதில்லை. அதே நேரத்தில் ஷியா பிரிவு மக்கள் வசிக்கும் இடங்களில் அரசு சுன்னி மசூதி கட்டுகிறது.

இந்த ஷியா பிரிவு மக்கள் வசிக்கும் பகுதியில் தான்   சவுதியின் பெரும்பான்மையான எண்ணெய் வளம் உள்ளது. இவர்களுக்கு எண்ணெய் முக்கியம் ஆனால் இந்த ஷியா பிரிவு மக்கள் முக்கியம் அல்ல.

முகமது நபி அவர்கள் பிறந்த நாட்டிலேயே இசுலாமியர்க்கு ஏன்  இந்த அவல நிலை  என்றால் நீங்கள் தான் சிந்தித்து பார்க்க வேண்டும். ஷியா சுன்னி இரண்டுமே இசுலாமின் பிரிவுகள் தான். மொத்தத்தில் இருவரும் கும்பிடுவது என்னவோ அல்லாவைத்தான் பிறகு ஏன் ஷியா பிரிவினர் மீது இந்த தீண்டாமை?

வாகாபிய இசுலாமியர்கள் இப்பொழுது தமிழகத்திலும் தங்கள் கொள்கைகளை பரப்ப ஆரம்பித்திருக்கிறார்கள் .
இவர்கள் தர்க்காவிற்கு  செல்வதையும்,சுபி ஞானிகள் வழிகளையும் குறை கூறுகின்றனர். ஏன் என்று  கேட்டால் அவர்கள் இணை வைக்கிறார்கள் எனவே அல்லா அவர்களுக்கு நரகம் தான் தருவார்  என்பர். இது தூய இசுலாம் அல்ல,நாங்கள் இசுலாமை சீர்திருத்தம் செய்கிறோம்    என்று புலம்புவர். 

வாகபிய இசுலாமிய பதிவர்களை நான் கேட்கிறேன் (ஒரு இசுலாமியர் வேறுமாதிரி கேட்டதுதான்)  வாகபிய இசுலாம் பதினெட்டாம் நூற்றாண்டில் தான் வந்தது அதற்க்கு முன்பு இருந்த அனைத்து இசுலாமியர்களுக்கும் நீங்கள் சொல்வதை பார்த்தல் நரகம் தான் அல்லா அளிப்பாரா? சுவனம் கிடைக்கும் என்று எண்ணி கிட்டத்தட்ட பன்னிரண்டு நூற்றாண்டுகள் வாழ்ந்த இசுலாமியர்கள்  கதி அவ்வளவுதானா? 

ஏன் இனில்  சூஃபி   பிரிவாக  இருந்தாலும் சரி சுன்னி பிரிவாக இருந்தாலும் சரி இரண்டு பிரிவினருமே இணை வைத்துத்தான் வழிபட்டனர். புரியும்படி சொல்லவேணும் என்றால் தர்க்காவிற்கு செல்வதை இருவருமே கடைபிடித்தவர்கள் தான். 

வகாபிய பதிவர்கள்   நல்லவர் என்று போற்றும் ஒளரங்கசீப்பும் சுன்னி பிரிவை சேர்ந்தவர் தான். ஆனால் அவரும் தர்க்காவிற்கு சென்றவர் தான். தர்க்காவிற்கு பண உதவி செய்தவர்தான். எனவே அவருக்கும் சுவனத்தில் இடம் இல்லையோ? (பின்னே பிறர் அல்லாவுக்கு இணை வைக்க உதவி இருக்கிறார் அல்லவா?)  பாவம் நமது சகோக்கள். ஒருவேளை இவர்களுக்குத்தான் சுவனத்தில் முதல் இடம் கிடைக்கப்போகின்றதோ என்னவோ.  

தனிமனிதர்கள் தவறு செய்தால் அரசாங்கத்திடம் செல்லலாம் இசுலாமிய அரசாங்கமே தவறு செய்தால் ஷியா மக்கள் எங்கு போவார்கள் என்ன செய்வார்கள்?

நமது தமிழ் முஸ்லிம்களும்  சுன்னி பிரிவை  சேர்ந்தவர்கள் தான் ஆனால் என்ன சுபி ஞானிகளின்  தாக்கம்  இவர்கள் மத்தியில் அதிகம் உண்டு. இதுதான் அவர்கள் நல்ல தன்மைக்கு காரணம். அதுமட்டுமல்ல இந்திய/இந்து   கலாச்சாரத்தில் இருக்கும் மத சகிப்புத்தன்மை அவர்கள் மனதிலும் உள்ளது. 

தமிழர்களுக்கு ஏன் இந்தியாவிற்கே பெருமை தேடி தந்த  நமது  ரகுமான்  சூஃபி   ஞானிகளின் பாதையில் செல்பவர். சேர்ந்தவர். (அவர் ஒருமுறை சொன்னார் என் முன்னே வெறுப்பு அன்பு என்று இரு வழிகள் இருந்தன நான் அன்பு வழியைத் தேர்ந்தெடுத்தேன் என்று)  அப்படிப்பட்ட நல்ல இசுலாமியர்கள்   மனதில் வாகபிய இசுலாமை(அதாவது வெறுப்பை)  பரப்புவதை  இப்பொழுது  சவுதியில் இருக்கும் நமது சகோதரர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள்.(சில பலருக்கு ஏற்க்கனவே பரப்பி விட்டார்கள் என்பது வேதனையான செய்தி)  இதற்கு எதிராக பிற  சகோதரர்கள் ஏதும் செய்வதாக தெரியவில்லை. ஏதோ இசுலாம் வளர்ந்தால் போதும் என்று நினைக்கின்றார்களா அல்லது வாகபிய இசுலாமியர்களை  கண்டு பயப்படுகிறார்களா என்று தெரியவில்லை. 


  சூஃபி  இசுலாமின் ஆன்மீக மார்க்கம் என்று  சொல்லலாம். மதங்களை சாடிய ஓஷோ  தன்னை    சூஃபியாகத்தான் பார்த்தார்.  சூஃபி ஞானிகள்   மதத்திற்கு அப்பாற் பட்டவர்கள் என்பது அவரின் கருத்து.  பல இசுலாமியர்களும் சில பல இந்துக்களும் செல்லும் நாகூர் தர்க்கா, அஜ்மீர் தர்க்கா போன்றவை  சூஃபி ஞானிகளின் சமாதிதான். இந்த தர்க்காக்களை இடிக்க வேண்டும் என்பது வாகபியத்தின் ஒரு கொள்கை.  வாகபிய இசுலாம் என்பது அடிப்படை வாதம்.  இது மனிதத்திற்கும் அவர்களின் உணர்வுகளுக்கும்  முக்கியத்துவம் தருவதில்லை. ஆன்மீகம் என்பது அதில் இல்லை. 

இந்துக்கள்  எல்லா  மதங்களும் இறைவனை அடையும் வழிகள் என்று ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால் கிருத்துவமும் இசுலாமியமும் இது ஒன்றே இறைவனை அடையும் வழி என்று வம்பு செய்கிறது. வாகாபியமோ இது ஒன்றே அல்லாவை அடையும் வழி என்று இன்றைய இசுலாமிலும் பல குறைகளை சொல்லி பிடிவாதம் பிடிக்கின்றது அனைவரையும் மதமாற்றம் செய்ய துடிக்கின்றது. 

இந்து மதத்தில் இந்தியாவில் அது அப்படி இருந்தது இது எப்படி இருந்தது  என்று  எழுதி மதமாற்றம் செய்ய முயலுபவர்கள் இங்கே ஏற்ப்பட்டுள்ள மாற்றத்தை கண்டுகொள்வதே  இல்லை.  இங்கே அந்த உரிமையை தந்தது தன்னை இந்து நாடு என்று கூறிக்கொள்ளாத இந்தியா. தன்னை இசுலாமிய நாடு என்று கூறிக்கொள்ளும் சவூதி இசுலாமியர்கலையே இரண்டாம் தர குடிமகன்களாக நடுத்துகின்றது. இதுதான் நம் தாய் திருநாடான மதசார்பற்ற இந்தியாவிற்கும்  மதசார்புள்ள சவுதிக்கும் உள்ள  வித்தியாசம்.

சவுதியில் ஷியா மக்களுக்கு ஏற்ப்பட்டுள்ள அரசியல் தீண்டாமை,தமிழகத்தில் தர்க்கா வழிபாடு மற்றும் சூஃபி வழிமுறைகளின் மீது ஆரம்பித்துள்ள  எதிர்ப்பு  ஆகியவை  நாளை உலகம் முழுக்க பரவும் அபாயம் உண்டு. இதற்கு நமது வாகபிய இசுலாம் சகோதரர்கள் என்ன சொல்லப்போகிறார்கள் என்ன செய்யப்போகிறார்கள்? தவறான கேள்வியோ?அவர்களுக்கும் மனசாட்சி இருக்கும் என்பதால் தான் கேட்கிறேன் ஏன் எனில் அவர்களும் தமிழர்கள் தானே.  ஷியா,சூஃபி  பிரிவு மக்கள் தான் தங்களது சுதந்திரத்தை காக்க  முயல வேண்டும்.பல  இந்துக்கள் இந்துக்களாக இருக்கும் வரை இந்தியாவில் ஷியா,சூஃபி  பிரிவு மக்க்ளுக்கானாலும் சரி எந்த மததிற்க்கானாலும் சரி மதத்தை  தாண்டி  மனித நேய அடிப்படையில் ஆதரவாக நிற்பர் என்பதை  அனைவரும் அறிவர். ஆனால் அது அவர்கள் இந்துக்களாக இருக்கும்வரைதான். 

என்னதான் இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மை என்றாலும் எந்த  மதத்தினர்களானாலும்   சரி அவர்களுக்கு  சகல  உரிமைகளும் உண்டு. இந்துக்களை விட ஒரு படி மேல் என்று கூட சொல்லலாம். (ஒரு சிலரால் ஓரிரு அசம்பாவிதங்கள் நடந்ததை மறுப்பதற்கில்லை)  பிற மதத்தினருக்கு எந்த பிரச்சனை என்றாலும் முதலில் குரல் கொடுப்பவன் ஒரு இந்துவாக இருப்பான். மோடியின் மீது வழக்கு தொடர்ந்தது ஒரு இந்துப் பெண்.  இதற்கு காரணம் பலரும்  தங்களை இந்துவாக நினைப்பதில்லை மாறாக மனிதர்களாகத்தான் பார்க்கின்றனர். ஆனால் சில பல இசுலாமியர்கள்  தங்களை மனிதன் என்று கூறிக்கொள்வதை  விட முஸ்லிம் என்று கூறிக்கொள்வதில் தான் பெருமைப்படுகின்றனர்.  இசுலாமிலும் தங்களை மனிதர்களாக பார்ப்பவர் இல்லை என்று சொல்லவில்லை மாறாக அவர்களின் குரல்  சரியாக கேட்கவில்லை என்றே சொல்கிறேன். 

இந்தியாவில் இந்து மதத்தில் ஜாதி ஒரு பெரிய  பிரச்சனைதான் மறுப்பதற்கில்லை. ஆயினும்  பல இந்து இந்திய தலைவர்கள் ஜாதியை எதிர்த்தனர். இன்று தீண்டாமையின் வீச்சு  பன்மடங்கு குறைந்துள்ளது.அரசியல் ரீதியாக எந்த ஒரு தீண்டாமையும் பாராட்டப்படுவதில்லை. பல தனி மனிதர்களும் ஜாதி பார்க்காமல் தான் இன்று பழுகுகின்றனர்.  இந்து மதம் இவ்வாறு தன்னை சீர் திருத்திக் கொள்கிறது அதற்கு வழி வகுக்கின்றது. ஆனால் இசுலாமில் சீர்திருத்தம் என்பது 1400 ஆண்டுகள் பின்னோக்கி செல்வதாகத்தான் உள்ளதே தவிர காலத்திற்கு ஏற்றார் போல் அல்ல.  அரசியல் ரீதியாகவே சவூதி இசுலாமில் இன்று தீண்டாமை தலை  விரித்தாடுகின்றது . 

அமெரிக்காவில்  மசூதிகள் நிறைய வந்துள்ளன அதனால் இசுலாம் வளர்கிறது என்று பெருமை பட்டுக்கொள்ளும் பதிவர்கள் சொந்த நாட்டிலேயே ஷியா பிரிவு மக்களுக்கு சவூதி இசுலாமிய அரசு மசூதி கட்டிக்கொள்ள அனுமதி தருவதில்லையே இதுதான் இசுலாமின் சிறப்பா? வளர்ச்சியா? அமெரிக்காவில் மசூதிகள்  கட்டிக்கொள்ள அனுமதி அளித்த அமெரிக்க அரசின் பெருமையும் கிருத்துவர்களின் பெருமையும் அல்லவா இதில் தெரிகிறது. இங்கே இசுலாமின் பெருமை தெரியவில்லை வாகபிய இசுலாமியர்களின் சிறுமையும் குறுகிய மனப்பான்மையும் தான் தெரிகிறது. எங்கே போனது இசுலாமின் மத சகிப்புத்தன்மை?

உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.’ (அல்-குர்ஆன் 109:6) இறைவனின் வார்த்தைகளாக நம்பும் இவற்றை நீங்கள் ஏன் கடைபிடிப்பதில்லை ?  இது பொய்யா அல்லது  நீங்கள் பொய்யர்களா?  

இப்பதிவின் நோக்கம் இசுலாமியர்களை  (நமது வாகபிய சகோக்கள் உட்பட) புண்படுத்துவது அல்ல மாறாக சிந்திக்க வைக்க வேண்டும் என்பதே. இப்பதிவில் தவறு இருப்பின் சுட்டி காட்டுங்கள் திருத்திக்கொள்கிறேன்.
என்றும் அன்புடனும் உண்மையுடனும்
இராச.புரட்சிமணி 

இதை எழுத உதவிய கட்டுரைகள்: 
http://dargahsharif.com/KGN_DARGAH%20SHARIF.htm

பிற்சேர்க்கை: இசுலாமிய  சவுதியில்  தீண்டாமை இல்லையா? என்று முதலில் இப்பதிவிற்கு தலைபிடப்பட்டது. சகோ அ. ஹாஜாமைதீன்  விருப்பப்படி  (அரசியல்) தலைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.
Related Posts Plugin for WordPress, Blogger...