வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

வியாழன், 29 நவம்பர், 2012

மாயன்கள் தமிழர்களா? அவர்கள் விண்வெளிக்கு சென்றனரா??


இன்றைய  நிலையில் உலகில் பேரழிவு ஏற்பட்டு பெரும்பாலான மக்களும் கண்டுபிடிப்புகளும் அழிந்துவிட்டால் என்னவாகும்? மிச்சம் மீதி இருப்பவர்கள் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையை, பயன்படுத்திய பொருட்களை பற்றி எழுதியோ,சித்திரம்  வடித்தோ,கதைகளாகவோ கூறி வைப்பார்கள். 

பல நூற்றாண்டுகள் கழித்து அவர்கள் சந்ததியினர் அந்த கதைகளை கேட்கும்பொழுது  பாருடா கூகிள் என்ற ஒன்ற வைத்து இவர்கள் பல தகவல்களை  நொடிகளில் பெற்றனராம், இடம் விட்டு இடம் செல்ல வானத்தில் பறந்து சென்றனராம், ஒரு இடத்தில் நடக்கும் நிகழ்வை மற்றொரு இடத்தில் இருந்து கண்டார்களாம்,செல் என்னும் ஒன்றை பயன்படுத்தி பல மைல் தொலைவில் உள்ளவர்களுடன் பேசினார்களாம்   என்னமா கதை விடுகின்றனர் இவையெல்லாம் வெறும் கட்டுக்கதைகள் என்பார்கள்.

நமது மூதாதையர்கள்  வாழ்ந்த வாழ்க்கையை  நாம் இப்படித்தான் கூறுகின்றோம் என்றே நான் நினைக்கின்றேன்.

ஆன்மீக வாழ்வை விரும்பாமல் அறிவியலிலும் கண்டுபிடிப்புகளிலும், உலக இச்சைகளிலும் மட்டும் கவனம் செலுத்தியவர்களை மாயன்கள்  என்று ஆன்மீக இந்தியர்கள் அழைத்திருப்பார்களோ?


மெய்ப்பொருள் காண்பதறிவு 

வெள்ளி, 23 நவம்பர், 2012

உலக நாடுகளை ஏன்,எப்படி அழிக்க வேண்டும்?


என் அருமை சகோதரர்களே,நண்பர்களே  நாம் உலக நாடுகளை அழிக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்த நாடுகளை அழிக்க நாம்  பரிந்துரைப்பது மனித வெடிகுண்டு  அல்ல, மனிதம்.

ஜாதி,மதம்,இனம்,மொழி, நாடு  என நாம் பல பிரிவுகளால் பிரிந்து நிற்கின்றோம். இவற்றை நாம் அழிக்காவிட்டால் இவற்றால் மனிதகுலம் அழிவதை நம்மால் தடுக்க இயலாது. இவைகள் வெறும் அடையாளங்களாக இருந்தால் பிரச்சனை இல்லை ஆனால் இந்த அடையாளங்களால் நமக்கு வெறி உண்டாகிறது . ஜாதி வெறி,மத வெறி,இன வெறி,தேச வெறி  என்று பல வெறிகளை உண்டாக்க நாம் வழிவகுத்து தந்துள்ளோம்.

ஜாதி பிரச்சனை ஊருக்குள், இந்தியாவிற்குள் பிரச்சனையை உண்டாக்குகின்றது. மதம்,இனம்,நாடு போன்றவை உலக அளவில் பிரச்சனையை உண்டாக்குகின்றது.

வரலாற்றை புரட்டி பார்த்ததால் இனத்திற்காகவும், மதத்திற்காகவும், நாட்டிற்காகவும் தான் பல மனிதர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.என் இனம்,என் மதம், என் நாடு என்ற உணர்வு வெறியாக மாறியதே இதற்க்கு காரணம்.

நாம் அனைவரும் மனிதர்கள் எனும்பொழுது நமக்கு ஏன் இந்த இனம்,மதம்,  நாடு சார்ந்த வெறிகள்?நமக்கு ஏன் இந்த அடயாளங்கள்? 

இனம்,மதம் என்ற அடையாளங்களை  மனிதகுலத்தின் நலனுக்காக நாம் அழிக்கவேண்டும்.நாம் அனைவரும் மனிதர்களாக மட்டும் இருக்க வேண்டும் என்பதை மக்களுக்கு போதிக்க வேண்டும்.

இனம்,மதம் ஆகியவற்றை அழித்த பிறகு  இன்றைய நிலையில் உள்ள நாடு என்பதையும் நாம் அழிக்க வேண்டும்.

அதாவது இந்தியா என்ற  ஒரு நாடு பல மாநிலங்களால் ஆனவை அதுபோல இந்த பூமியும் பல நாடுகளால் ஆனவை. பல மாநிலங்களுக்கும் எவ்வாறு தனித்தனி அதிகாரமும், மத்திய அரசுக்கென்று தனி அதிகாரமும் உள்ளதோ அதைப்போல நாம் உலக அளவில் ஒரு நிர்வாகத்தை உருவாக்கவேண்டும் .

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் தங்களுடைய வருமானத்தை மத்திய அரசாங்கத்தோடு  பகிர்ந்துகொள்கின்றது. அதுபோல இப்புவியில் உள்ள அனைத்து நாடுகளும் தங்களுடைய வருமானத்தை பகிர்ந்துகொள்ளவேண்டும். இப்படி பகிர்ந்துகொள்ளும்போழுது உலகில் ஒவ்வொரு வருடமும் பசியால் இறக்கும் ஆறு மில்லியன் குழந்தைகளின் உயிரை நம்மால் காப்பாற்ற முடியும்.

இந்தியாவில் பல மாநிலங்கள் இருந்தாலும் ஒரு மாநிலம் மற்றொரு மாநிலத்தோடு சண்டையிடுவதில்லை, அந்த மாநிலம் நம்மை தாக்குமோ என்ற அச்சம் கொள்வதில்லை . அதுபோல   உலக நாடுகள் அனைத்தும்  அச்ச உணர்வைவிடும்படி நாம் செய்ய வேண்டும். அவ்வாறு நாம் செய்யும் பொழுது  $2,157,172,000,000 பணத்தை நாம் மனிதகுலத்தின் மேன்மைக்காக பயன்படுத்தலாம்.  நான் கூறிய அந்த தொகை சென்ற  ஆண்டு  உலக நாடுகளால் ராணுவத்திற்காக செலவிடப்பட்டதாகும். 

உலகத்தை ஒரு நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரும்போழுது எல்லை 

பிரச்சனைகளையும்  நம்மால் குறைக்க முடியும். ஒரு நாடு மற்றொரு 

நாட்டினை தாக்குவதை நம்மால்  கட்டுப்படுத்த முடியும்.


இந்தியாவில் உள்ளவர்கள் எப்படி பிற மாநிலங்களுக்கு நினைத்த நேரத்தில் செல்லமுடிகிறதோ அவ்வாறு உலகின் எந்த மூலைக்கும் கடவுச்சீட்டு இல்லாமல் செல்ல முடியும்.

இனம்,மதம் என்ற அடையாளங்களை அழித்து நாடுகளையும் ஒரு நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரும்பொழுது இவை இருப்பவைகளால் கொல்லப்படும் பல பில்லியன் உயிர்களை நம்மால் காப்பாற்ற முடியும்.

உலக நாடுகளை ஒன்றினைக்கும்போழுது சில சிறிய எதிர்ப்புகள் வரத்தான் செய்யும்.  எதிர்ப்புகளை தாண்டி அவ்வாறு ஒரு நிர்வாகத்தை நாம் அமைக்கும்பொழுது மனிதகுலம் பல பிரச்சனைகளை தவிர்க்க முடியும்,பல நன்மைகளை அடைய முடியும்.

இது நடக்குமா என்பது தெரியவில்லை...ஆனால் இது நடக்க வேண்டும். உலக மக்கள் அனைவரையும் நாம் மனிதம் என்ற ஒரு புள்ளியில் இணைக்க வேண்டும். 

செவ்வாய், 20 நவம்பர், 2012

இணையத்தை உபயோகிப்பவர்களே இந்த ஆப்பு போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா?

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல மனிதனுக்கு சொல். IT Act Sec 66(a) வை பயன்படுத்தி இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

முகநூலில் பால் தாக்கரே பற்றி எழுதியதற்காக ஒரு பெண்ணும் அதை  'லைக்' செய்ததற்காக ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டு பிறகு பெயிலில் விடப்பட்டுள்ளனர்.கடந்த ஒரு மாதத்தில் இந்த சட்டத்தை பயன்படுத்தி  இது எத்தனையாவது கைது என்பதை உங்கள் கணக்கிற்கே விட்டு விடுகின்றேன்.

நம்மில் சிலர் வழக்கம்போல  ஒரு பதிவு போட்டுவிட்டு அமைதியாக இருப்போம் சரியா? 

 IT Act Sec 66 a  க்கு  எதிராக சிலர் வழக்கு தொடர்ந்தததாக கேள்வி. அந்த வழக்கிற்கு  என்ன நடந்தது என்று தெரியவில்லை.

நம்முடைய எதிர்ப்பை ஆர்ப்பாட்டம், பேரணி மூலம் காட்டினால்தான் நம்முடைய குமுறல் சட்டத்தை இயற்றுபவர்களின் காதுகளுக்கு செல்லும் என நினைக்கின்றேன்.
விருப்பம் உள்ளவர்கள் சென்னையில் காந்தி சிலைக்கு அருகில் ஒன்று கூடி  IT ACT 66 (a) க்கு  எதிராக குரல் கொடுக்கலாம் என நினைக்கின்றேன்.

விருப்பம் உள்ளவர்கள் எந்த நாளில், எந்த நேரத்தில் இதை செய்யலாம், இதை எப்படி ஒருங்கிணைக்கலாம்  என்ற உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.அனுபவம்  உள்ளவர்கள் வழிகாட்டுங்கள்.

மின்னஞ்சல்:puratchimanidham@gmail.com

நீங்கள் யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை, வரவில்லை என்றால் நான் மட்டும் சென்று  சுண்டல் சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு வந்துவிடுவேன் :)


இந்த பதிவை வெளியிட்டதற்காக நான் கைது செய்யப்படலாம்!


ஞாயிறு, 18 நவம்பர், 2012

சுவனப்பிரியனின் பெண்கல்வி முறையை பின்பற்றி உலத்தையே இசுலாமை ஏற்க செய்வோமா?



 சுவனப்பிரியன் என்பவர்   இசுலாமில் பெண்கல்விக்கு ஆதரவாக ஒரு பதிவு எழுதியுள்ளார். அதில் அவர்  தந்துள்ள முக்கியமான கருத்து.
//மூட்டைப் பூச்சிக்கு பயந்து கொண்டு வீட்டை கொளுத்துவோமா! மாட்டோம். எனவே வயதுக்கு வந்த பெண்கள் தனியே பெண்கள் மட்டுமே படிக்கக் கூடிய பள்ளி கல்லூரிகளில் சேர்ந்து தங்களின் கல்வி அறிவை பெருக்கிக் கொள்வார்களாக!//

அதற்க்கு நாகூர் மீரான் என்பவரின் பின்னூட்டம் 

// பெண்கள் வீதியில் விற்கப்படும் கருவாடு அல்ல..அவர்கள் வைரங்கள், பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்..அவர்கள் பாதுகாப்புக்கு செய்யவேண்டிய அணைத்து வேலைகளும் செய்வது எமது கடமை..அதில் ஒன்று அவர்களுக்கு பாதுகாப்பான கல்வி வழங்குவது..தனியான பெண்கள் கல்லூரி அமைப்பது ..அதில் அணைத்து மத பெண்களுக்கும் இடமளித்து ஆண் பெண் கலப்பு எனும் சமுதாய ஒழுக்க கேடு ஏற்படாமல் தடை ஏற்படுத்துவது ...//

இனி என்னுடைய கருத்து .....
அருமையான  முடிவு 

இனி  வாகாபிச இசுலாமிய பெண்கள் பெண்களுக்காக பெண்களால் இயக்கப்படும் பேருந்தில்,ஆட்டோவில்   மட்டுமே செல்லட்டும் 

இனி  வாகாபிச இசுலாமிய பெண்கள் பெண்களுக்காக பெண்களால் நடத்தப்படும் நிறுவனத்திற்கு  மட்டுமே வேலைக்கு செல்லட்டும் 

பெண்களுக்கென சவூதி அரேபியாவில் ஒரு நகரம் கட்டுவது  போல தமிழகத்தில் வாகாபிச  இசுலாம்  உள்ள  ஊர்களில் பெண்களுக்காக ஒரு தெருவை ஏற்ப்படுத்துவோம் 

ஆம்  உரக்கச்சொல்வோம் 
(கீழே உள்ளவை UNMAIKAL என்பவர் கூறியது )
//• இஸ்லாத்தில் பெண்கள் வேலைக்கு செல்ல தடையில்லை.

• அப்படி வேலைக்கு சென்று சம்பாதித்தாலும் அதை குடும்பத்திற்கு செலவழிக்க வேண்டிய கடமை அவர்களுக்கு கிடையாது.

• இஸ்லாத்தில் பெண்கள் வெளியே செல்ல தடையில்லை.

• இஸ்லாத்தில் பெண்கள் கல்வி கற்க தடையில்லை.

• இஸ்லாத்தில் பெண்கள் விளையாட்டில் பங்குகொள்ள தடையில்லை.

• இஸ்லாத்தில் பெண்கள் கணவனை தேர்ந்தெடுக்க தடையில்லை//

கீழே உள்ளவை என்னுடைய கருத்து 

வாகாபிச இசுலாமிய பெண்கள் பெண்களுடனே மட்டுமே பேச வேண்டும் என்று மறக்காமல் சொல்லுவோம் 

வாகாபிச பெண்களுக்கு இசுலாமியர்கள் தரும் சுதத்திரந்தை பார்த்து பிற மதத்தில் உள்ள பெண்கள் உடனே இசுலாமில் சேரட்டும்.

பெண்கள் இல்லாமல் ஆண்கள் என்ன செய்வார்கள் எனவே உலக ஆண்கள் அனைவரும்  இசுலாமில் சேருவார்கள் .

பின்பு நாம் இறந்து பல கோடி  ஆண்டுகள் கழித்து, அல்லா  நம்மை எழுப்பி அனைவருக்கும் சுவனத்தில் மாளிகைகள் ,பட்டாடைகள் ,மது, பெண்கள் தந்து நம்மை மகிழ்விப்பார்.

உடனே வாகாபிச இசுலாமில் சேர்ந்திடுங்கள் இறந்து பல கோடி  ஆண்டுகள் கழித்து சுவனத்தை அடைந்திடுங்கள்.

பின்குறிப்பு : இந்த பதிவில் இசுலாம் என்பது வாகாபிச  இசுலாமையே குறிக்கும் என கூற காரணம் என்னவெனில்  சம்பந்தப்பட்ட பதிவை எழுதியவரும் அதை ஆதரிப்பவர்களும் வாகாபிய இசுலாமியர்களே.பெண்கல்விக்கு தடை விதித்த அமைப்பு எந்த பிரிவை சார்ந்தது என்று யாராவது  விளக்கினால் நன்றாக இருக்கும். நன்றி 

செவ்வாய், 6 நவம்பர், 2012

நமக்கு சங்கம் வேண்டும் என்று இன்னுமா உங்களுக்கு உரைக்கவில்லை?

சின்மயி- ராஜன், கார்த்திக் சிதம்பரம் - ரவி சங்கரன்  இந்த பிரச்சனைகளை
பார்த்தும் நாம் திருந்தவில்லை என்றால்  நாம் கல்வி கற்று என்ன பயன்? எழுதி  என்னத்தை கிழித்து விடப்போகிறோம்?

நமக்கென்று ஒரு சங்கம் இருந்திருந்தால் சின்மயி-ராஜன் மற்றும் பிறர் 
பிரச்சனையை இந்த அளவிற்கு வளர விடாமல் தவிர்த்திருக்கலாம். சங்கத்தின் மூலமாக  சின்மயி -ராஜன் மற்றும் பிறர்கள் மத்தியில்   நாம் சமாதானத்தை ஏற்ப்படுத்தி  இருக்கலாம்.இங்கே இருவரது நலனையும் நம்மால் காப்பாற்றி இருக்க முடியும்.

சங்கம் இல்லாததால் நாம் அதை செய்யவில்லை  அதனால் ராஜன், சரவணன் ஆகியோர் இன்று  சிறையில். சின்மயியும் மன உளைச்சலில்.

சின்மயி பிரபலம் என்பதால் இதற்க்கு முன்பு  புகார் கொடுத்தவர்களுக்காக எந்த  வித நடவடிக்கையையும் எடுக்காமல் இவருக்காக காவல் துறை 
நடவடிக்கை எடுத்துள்ளதாக பலரும் கூறுகின்றனர். சங்கம் இருந்திருந்தால் முன்பு  புகார் கொடுத்தவர்களின் பிரச்சனைகளையும் நம்மால் தீர்த்து வைத்திருக்க  முடியும்.

'ராபர்ட் வதோராவைவிட கார்த்திக் சிதம்பரம் அதிக சொத்து சேர்த்துள்ளதாக  செய்தி  வந்துள்ளது' என்று கூறியதற்காக ரவி சீனிவாசன் என்பவர் கைது
செய்யப்பட்டுள்ளார். ஆங்கிலேயன்  ஆட்சி காலத்தில்  இருந்ததைவிட இன்று நாம் மிக மோசமான நிலையில் இருக்கின்றோம் என்பதையே இவைகள்
காட்டுகின்றன.

நம்மிடம் சங்கம் இருந்தால்  நாம் இவர்களுக்காக போராடலாம். ஏன் சட்டத்தை கூட  நம்மால் திருத்த முடியும்.

நடிகர்கள் சங்கம், எழுத்தாளர்கள் சங்கம் என்று இருக்கும்பொழுது ஏன் இணைய  எழுத்தாளர்கள்  சங்கம் ஒன்றை ஏற்ப்படுத்த கூடாது?

பிளாக்கர்,டிவிட்டர்,முகநூல் மற்றும் மின்னஞ்சல் இவைகளில்  கருத்து
சுதந்திரத்தை காப்பாற்ற, நாம் சிறைக்கு செல்லாமல் இருக்க சங்கம் தேவை.

சங்கம் என்பது கைது நடவடிக்கைகளுக்காக மட்டுமல்ல, சமூக நலனுக்காகவும் நாம் ஒட்டுமொத்தமாக குரல் கொடுக்க  பயன்படுத்தலாம்.

நமக்கு நாமே சில சட்டங்களை வகுத்துக்கொண்டு ஆபாச வார்த்தைகளை தவிர்க்கலாம், தமிழ் மொழியில் மொழி பெயர்ப்புகளை கொண்டுவரலாம்,
 பதிவர் சந்திப்பு போன்ற நிகழ்சிகளில் நமது நூல்களை வெளியிடலாம்,
நூல் வெளியிட ஆர்வம் இருந்தும்  பதிப்பகத்தை தொடர்பு கொள்ள இயலாவதருக்காக நாம்  வழிகாட்டலாம், விளம்பரங்களை  கூட நாம் பதிவுகளில் இட மொத்தமாக வாங்கலாம் - பலருக்கும்
பங்கிட்டு தரலாம்.

சங்கத்தினால் நாம் நன்மைகளை அடைகிறோமோ இல்லையோ துன்பத்தையாவது அடையாமல்  தவிர்க்கலாம்.


 சங்கத்தை  மனதில் வையுங்கள்.

நாம் உடனடியாக என்ன செய்யவேண்டுமெனில் தகவல் தொழில் நுட்ப சட்டம் 66A வில்  மாற்றங்களை கொண்டு வரவேண்டும் .  அதிகாரம் உள்ளவர்கள்  தவறாக பயன்படுத்தும்  வகையில்  இந்த சட்டம் உள்ளது.
அந்த சட்டம் அப்படி என்ன சொல்கிறது?

------------------------------------------------------------------------------------------------------------------------------


**[ 66A. Punishment for sending offensive messages through communication
service, etc..-* Any person who sends, by means of a computer resource or a
communication device,-

(a) any information that is grossly offensive or has menacing character; or

(b) any information which he knows to be false, but for the purpose of
causing annoyance, inconvenience, danger, obstruction, insult, injury,
criminal intimidation, enmity, hatred, or ill will, persistently makes by
making use of such computer resource or a communication device,

(c) any electronic mail or electronic mail message for the purpose of
causing annoyance or inconvenience or to deceive or to mislead the
addressee or recipient about the origin of such messages

shall be punishable with imprisonment for a term which may extend to three
years and with fine.


Explanation: For the purposes of this section, terms "Electronic mail" and
"Electronic Mail Message" means a message or information created or
transmitted or received on a computer, computer system, computer resource
or communication device including attachments in text, image, audio, video
and any other electronic record, which may be transmitted with the message.


[* Inserted vide Information Technology Amendment Act, 2008]

 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த சட்டப்படி நம் கருத்தால் பிறர் கோபமடைந்தாள் கூட நம்மீது வழக்கு தொடுக்க  முடியும்.  நாம்  அரசியல் பற்றி எழுத முடியாது. திரை  விமர்சனங்கள் கூட எழுத முடியாது.

அதாவது நாம் எந்த கருத்தையும் சொல்லக்கூடாது என்றே இந்த அதிகாரவர்க்கம் இந்த  மாதிரி ஒரு சட்டத்தை கொண்டு வந்துள்ளது. அவர்கள் நினைத்தால் நம் அனைவரையும்  இன்றே   சிறையில் அடைக்க முடியும்.

டிவிட்டரில் கருத்து சொன்னவர்களே இதுவரை  கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே சங்கத்தை மனதில் வையுங்கள் போராட்டத்தை டிவிட்டரில் இருந்தே தொடங்குவோம்.

அனைத்து  டிவிட்டர் உபயோகிப்பாளர்களும்  #ModifyIndianITAct66A என்று தங்களுடைய பெரும்பாலான டிவிட்டுகளில் பயன்படுத்தவேண்டும்.  நாளை  முதல்  இச்சட்டம் மாற்றியமைக்கப்படும் வரை நாம்   இதை செய்ய வேண்டும். நமக்கு தெரிந்த தெரியாத    பலரையும் இதை நாம் செய்ய
சொல்ல   வேண்டும்.   நமது குரல் நிச்சயம்  மாற்றத்தை  கொண்டு வரும்.
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள.

பதிவுலகிலும் நாம் ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரே பதிவை இடலாம் என்ற எண்ணத்தில் உள்ளோம். அதுபற்றி பின்வரும் கட்டுரைகளை படித்து உங்களது கருத்தையும்  ஆதரவையும் தாருங்கள்.
http://dharumi.blogspot.com/2012/11/601-i-t-act-section-66.html

http://anjaasingam.blogspot.com/2012/11/blog-post.html

 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு  நம்மில்   ஒற்றுமை நீங்கின் அனைவருக்கும்  சிறையே.
Related Posts Plugin for WordPress, Blogger...